கோவையில் தனியார் கல்லூரி பேருந்து மீது வேன் மோதி விபத்து - வேன் ஓட்டுநர் பலியான சோகம்!

கோவை மாதம்பட்டி அருகே தனியார் கல்லூரி பேருந்து மீது கார் மோதிய விபத்தில், காரின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் ஐடி நிறுவனத்திற்கு வாடகை வேன் ஓட்டி வந்த ராமலிங்கம்(30) என்பவர் உடல் நசுங்கி உயிரிழந்தார்.


கோவை: மாதம்பட்டி அருகே தனியார் கல்லூரி பேருந்து மீது இகோ வேன் மோதி விபத்து, வேனை ஓட்டி வந்த ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கோவை பூலுவப்பட்டியை சேர்ந்தவர் ராமலிங்கம் (30). இவர் ஐடி நிறுவனத்திற்கு வாடகை அடிப்படையில் வேன் ஓட்டி வந்தார். இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல சிறுவாணி சாலையில் ராமலிங்கம் காரில் வேலைக்குச் சென்றுள்ளார்.



அப்போது மாதம்பட்டி கருப்பசாமி தோட்டம் அருகே வந்த போது, ராமலிங்கம் முன்னே சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த வேன், எதிரே வந்த தனியார் கல்லூரி பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது.



இதில் வேனின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியதில், ராமலிங்கம் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து தகவலறிந்து வந்த பேரூர் போலீசார், தீயணைப்பு துறையினர் உதவியுடன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...