கோவையில் சிறுமியை திருமணம் செய்த கர்ப்பமாக்கிய இளைஞருக்கு ஆயுள் தண்டனை

கோவையில் 16 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய இளைஞருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.15,000 அபரதம் விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கோவை: கோவையில் 16வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கோவையை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவரை 23 வயது இளைஞர் கடந்த 2020இல் திருமணம் செய்துள்ளார். இதையடுத்து சிறுமி கர்ப்பமானதாக தெரிகிறது. பின்னர் அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக சிறுமி சென்றார். அப்போது விசாரித்த போது சிறுமிக்கு 16 வயது மட்டுமே ஆனது தெரியவந்தது.

இதையடுத்து ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள் அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து போலீசார் சிறுமியை திருமணம் செய்த இளைஞர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

பின்னர் இளைஞர் பினையில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கு விசாரணை கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை நிறைவடைந்த நிலையில் 16 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய இளைஞருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.15,000 அபராதம் பிரித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட்டார்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...