பல்லடத்தில் கெட்டுப்போன கேக் சாப்பிட்ட சிறுமிக்கு வாந்தி, மயக்கம் - பரபரப்பு!

பல்லடத்தில் கெட்டுப்போன கேக்குகளை சாப்பிட்ட சிறுமிக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், உணவு பாதுகாப்பு துறையினர் கெட்டுப்போன கேக்கை விற்பனை செய்த பேக்கரியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கெட்டுப்போன கேக் சாப்பிட்ட சிறுமிக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் பஷீர். இவர் திருப்பூர் மாவட்டம் பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான மங்களம் சாலை, பொள்ளாச்சி, உடுமலை சாலை, திருப்பூர் சாலை, செட்டிபாளையம் சாலை உள்ளிட்ட ஆறு இடங்களில் பேக்கரி கடைகளை நடத்தி வருகிறார்.



இந்நிலையில் இன்று மதியம் பல்லடம் மங்கலம் சாலை அரசு மேல்நிலை பள்ளி மற்றும் அரசு கல்லூரிக்கு எதிரே இயங்கி வரும் சோனா பேக்கரி கடைக்கு அரசு கல்லூரி சிறப்பு பேராசிரியராக பணிபுரிந்து வரும் மகாலட்சுமி என்பவர் தனது இரண்டு மகள்களை அழைத்துக் கொண்டு சென்றுள்ளார்.



அந்த கடையில் தனது மகள்களுக்கு கேக் வாங்கி கொடுத்துள்ளார்.

குழந்தைகள் வாங்கி சாப்பிட்ட கேக்குகள் கெட்டுப்போய் துர்நாற்றம் வீசியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து பேராசிரியர் மகாலட்சுமி கெட்டுப் போன இரண்டு கேக்குகளையும் கடை ஊழியர்களிடம் கெட்டுப்போன உணவு பண்டத்தை ஏன் கொடுத்தீர்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.



இதுகுறித்து தகவலறிந்து பல்லடம் உணவு பாதுகாப்புத் துறை வட்ட அலுவலர் கேசவராஜ் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்தக் கடையில் ஆய்வு மேற்கொண்டார்.



அதில் கெட்டுப்போன காலாவதியான தயாரிப்பு தேதியும் அச்சிடப்படாத கேக் வகைகளை கடைக்காரர்கள் விற்பனை செய்தது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து மாதிரி கேக்குகளை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சேகரித்து சென்றனர். இந்நிலையில், கேக் சாப்பிட்ட சிறுமிக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் பல்லடம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனையும், முதலுதவி சிகிச்சையும் அளிக்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து பல்லடம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளும் காவல்துறையினரும் பேக்கரி கடை அதிபர் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

2026 நீட் தேர்வு ரத்து: மே 3ஆம் தேதி நடைபெற்ற NEET தேர்வு செல்லாது! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்கள் மற்றும் தேர்வின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கடந்...

உலக செவிலியர் தினம்: திருப்பூரில் விழிப்புணர்வு பேரணி

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர்கள் உறுதிமொழி ஏற்று விழிப்புணர்வு பேரணிய...

திருப்பத்தூர் TVK எம்.எல்.ஏ. சீனிவாச செதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க Madras High Court தடை

திருப்பத்தூர் தொகுதியில் இரண்டு இடங்களில் ஒரே பெயர் இருப்பதால் DMK முன்னாள் அமைச்சர் K.R. பெரியகருப்பன் தாக்கல் செய்த மன...

வால்பாறையில் பயங்கர விபத்து: கார் மோதி பெண் படுகாயம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. படுகாய...

வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய பதைபதைப்பு சம்பவம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. சிசிடி...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...