கவுண்டம்பாளையம் அரசு ஊழியர் குடியிருப்பில் மகளிர் தின விழா கொண்டாட்டம்!

கோவை கவுண்டம்பாளையம் அரசு ஊழியர்கள் குடியிருப்பு வளாகத்தில் மகளிர் தினத்தையொட்டி கடந்த 2 நாட்களாக நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.


கோவை: கவுண்டம்பாளையம் அரசு ஊழியர்கள் குடியிருப்பில் நடைபெற்ற மகளிர் தின விழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

கோவை கவுண்டம்பாளையம் அரசு ஊழியர்கள் குடியிருப்பு வளாகத்தில் கடந்த இரண்டு நாட்களாக “நம்ம ஊரு கொண்டாட்டம்” என்ற தலைப்பில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இதில் பரத நாட்டிய நிகழ்ச்சி, சிலம்பாட்டம் நிகழ்ச்சி, நடன நிகழ்ச்சி, பட்டிமன்றம், விளையாடுப் போட்டிகள் உள்ளிட்டவை நடைபெற்றது.



இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட துடியலூர் காவல் ஆய்வாளர் ஞானசேகரன் பேசுகையில், வாழ்க்கையில் ஒழுக்க நெறிகளை பின்பற்றி வாழும் குழந்தைகள் ஆளுமை மிக்கவர்களாக வளர்கிறார்கள். பெண்கள் தங்களின் சுயமாக சிந்திக்கும் திறன் கொண்டவர்களாகவும், தன்னிச்சையாக செயல்படுவதும், ஆற்றல் பொருந்தியவர்களாகவும் இருப்பது மிகச்சிறந்த உழைப்புக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதை பார்க்கும் போது மிகவும் பெருமையாக உள்ளது, என்றார்.



அவினாசிலிங்கம் கல்லூரி பேராசிரியர் அகிலாண்டேஸ்வரி பேசுகையில், அனைவரும் உடற்பயிற்சி செய்வது யோகா பயிற்சி செய்வது மன அழுத்தம் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வழி வகுக்கும், என்றார்.



இந்த நிகழ்வில், மாவட்ட தலைவர் லயன் சுபா சுப்பிரமணியம் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். அனிதா தேவி மனித வள மேம்பாடு மற்றும் மாணவர்களின் கல்வியறிவு பயிற்சியாளர்கள் பற்றிய குறிப்புகளை வழங்கினார்.



இளம் வழக்கறிஞர் அன்பு செல்வம், சட்டம் அனைத்து பெண்களும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் பற்றி எடுத்துரைத்தார். இறுதியாக விழா ஒருங்கிணைப்பாளர் சோபா நதியா நன்றி உரை நிகழ்த்தினார்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...