கோவை மாநகராட்சிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுதாக்கல்!

கோவை மாநகராட்சியில் 6 பேருக்கு ஓட்டுநர் பணி வழங்க உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, கோவை மாநகராட்சி நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் பட்சத்தில் தங்களின் தரப்பின் கருத்தை கேட்க கோரும் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


கோவை: உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு நகராட்சி நிர்வாகம், கோவை மாநகராட்சிக்கு எதிராக கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சியில் (பணிமாற்று அடிப்படையில்) ஓட்டுநராக பணிபுரியும் சமூகநீதி தூய்மை பணியாளர் தொழிற்சங்கத்தின் தலைவர் ஜெயபால் மற்றும் 6 தொழிலாளர்கள் ஓட்டுநர் பணியிடம் வழங்க கோரி, ஜெயபால் உள்ளிட்ட 6 தூய்மை பணியாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் 2007இல் வழக்கு தொடர்ந்தனர்.



இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் ஜெயபால் உள்ளிட்ட ஏழு பேருக்கும், ஓட்டுநர் பணியிடம் வழங்க வேண்டும் என்று கடந்த 2014இல் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து கோவை மாநகராட்சி மேல்முறையீடு செய்ததில், மேல்முறையீட்டு வழக்கில் விசாரித்த நீதிமன்றம், ஏழு பேருக்கும் ஓட்டுநர் பணி மற்றும் நிலுவை தொகையுடன் கூடிய ஓட்டுநர் ஊதியத்தை வழங்க சென்னை உயர்நீதிமன்றத்தின் டிவிசன் பென்ஞ்ச் உத்தரவிட்டது.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, கோவை மாநகராட்சி நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும், பட்சத்தில் தங்களின் தரப்பின் கருத்தை கேட்க கோரும் கேவியட் மனு, ஓட்டுநர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...