சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

சிலிண்டர் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி திருப்பூர் மிலிட்டரி காலனி பகுதியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிலிண்டருக்கு மாலை அணிவித்தும், மத்திய அரசை கண்டித்து கோஷங்களையும் எழுப்பினர்.



திருப்பூர்: திருப்பூர் அடுத்த மிலிட்டரி காலனி பகுதியில் சிலிண்டர் உயர்வை கண்டித்து மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு கடந்த எட்டு ஆண்டுகளில் பலமுறை சமையல் கேஸ் சிலிண்டர் விலையை உயர்த்தியதால் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தினர் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். அந்த வகையில் இந்த மாதம் ஒன்றாம் தேதி சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் 50 ரூபாய் உயர்ந்தது.



இதனிடையே சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் உடனடியாக சிலிண்டர் விலையை கட்டுப்படுத்த கோரியும் திருப்பூர் மிலிட்டரி காலனி பகுதியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



மாவட்டத் தலைவர் விஜயா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாதர் சங்கத்தினருடன் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு சிலிண்டருக்கு மாலை அணிவித்தும், மத்திய அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராகவும், சிலிண்டர் விலையை கட்டுப்படுத்த கோரியும், கோஷங்களை எழுப்பினர்.

Newsletter

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...

கோவை கண்ணப்பநகரில் அண்ணாமலை தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியின் கண்ணப்பநகர் பகுதியில் தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் K.Annamalai, அதிமுக கோவை வடக்...

பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், தீவிர பிரச்சாரத்தால் ஏற்பட்ட காலில் வலி மற்று...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

தொண்டாமுத்தூர்: திமுக வேட்பாளர் என்.ஆர். கார்த்திகேயன் வெற்றிக்காக கட்சியினர் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் – செந்தில் பாலாஜி

தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டத்தில், கூட்டணிக் கட்சிகளின் நிர்வ...