சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

சிலிண்டர் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி திருப்பூர் மிலிட்டரி காலனி பகுதியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிலிண்டருக்கு மாலை அணிவித்தும், மத்திய அரசை கண்டித்து கோஷங்களையும் எழுப்பினர்.



திருப்பூர்: திருப்பூர் அடுத்த மிலிட்டரி காலனி பகுதியில் சிலிண்டர் உயர்வை கண்டித்து மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு கடந்த எட்டு ஆண்டுகளில் பலமுறை சமையல் கேஸ் சிலிண்டர் விலையை உயர்த்தியதால் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தினர் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். அந்த வகையில் இந்த மாதம் ஒன்றாம் தேதி சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் 50 ரூபாய் உயர்ந்தது.



இதனிடையே சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் உடனடியாக சிலிண்டர் விலையை கட்டுப்படுத்த கோரியும் திருப்பூர் மிலிட்டரி காலனி பகுதியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



மாவட்டத் தலைவர் விஜயா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாதர் சங்கத்தினருடன் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு சிலிண்டருக்கு மாலை அணிவித்தும், மத்திய அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராகவும், சிலிண்டர் விலையை கட்டுப்படுத்த கோரியும், கோஷங்களை எழுப்பினர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...