கோவையில் பெண் மீது ஆசிட் வீசிய நபரை துரத்தி பிடித்த பெண் காவலரை நேரில் அழைத்து பாராட்டிய எஸ்.பி!

கோவை நீதிமன்ற வளாகத்தில் பெண் மீது ஆசிட் வீசிவிட்டு தப்பியோடிய சிவாவை துரத்தி பிடித்த பெண் காவலர் இந்துமதியை, மாவட்ட எஸ்.பி பத்ரி நாராயணன் நேரில் அழைத்து பாராட்டி, ரூ.5,000 வெகுமதி வழங்கியுள்ளார்.


கோவை: கோவை நீதிமன்ற வளாகத்தில் பெண் மீது ஆசிட் வீசிய நபரை துரத்தி பிடித்து கைது செய்த பெண் காவலரை மாவட்ட எஸ்.பி நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

கோவை நீதிமன்ற வளாகத்திற்கு வழக்கு விசாரணைக்காக வந்த கவிதா என்ற பெண் மீது அவரது முதல் கணவரான சிவா ஆசிட்டை ஊற்றி விட்டு தப்பிச் சென்றார்.

இந்நிலையில், சிவா நீதிமன்ற வளாகத்தில் இருந்து தப்பி வெளியே ஓடியபோது அங்கு வேறு வழக்கு விசாரணைக்காக வந்த ஆனைமலை பெண் காவலர் இந்துமதி, சிவாவை துரத்திச் சென்று பிடித்து கைது செய்தார்.

இதனிடையே கைது செய்யப்பட்ட சிவாவிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் தைரியமாக குற்றவாளியை துரத்திச் சென்று பிடித்த பெண் காவலரை மாவட்ட எஸ்.பி.பத்ரிநாராயணன் நேரில் அழைத்து பாராட்டி ரூ.5,000 வெகுமதி அளித்துள்ளார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...