கோவை சுல்தான் பேட்டை ஒன்றியத்தில் கனமழை - 20,000 வாழை மரங்கள் சேதம்!

கோவை மாவட்டம் சுல்தான் பேட்டை ஒன்றியத்தில் திடீரென காற்றுடன் பெய்த மழை வெளுத்து வாங்கிய நிலையில், வடம்பச்சேரி, செஞ்சேரிபுதூர், செஞ்சேரிமலை பகுதிகளில் 300 ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த 20,000 வாழை மரங்கள் சேதமடைந்தன.


கோவை: சுல்தான் பேட்டை ஒன்றியத்தில் காற்றுடன் பெய்த மழை காரணமாக 20,000 வாழை மரங்கள் சேதமடைந்தது.

கோவை மாவட்டம் சுல்தான் பேட்டை ஒன்றியத்தில் வடம்பச்சேரி, செஞ்சேரி புதூர், செஞ்சேரிமலை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 300 ஏக்கரில் வாழை பயிரிடப்பட்டுள்ளன.



பயிரிடப்பட்ட வாழைகள் 10 மாதங்களில் அறுவடைக்கு வரும். இந்நிலையில், சுல்தான் பேட்டை ஒன்றியத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் வடம்பச்சேரி, செஞ்சேரிபுத்தூர் பகுதிகளில் 20,000 வாழை மரங்கள் சேதமடைந்தது. அறுவடைக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், மரங்கள் சேதமடைந்தால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, சுல்தான் பேட்டை வட்டார தோட்டக்கலைத் துறை உதவி அலுவலர்கள் சாய்கண்ணன், தினகரன், மந்திராசலம், வடம்பச்சேரி, செஞ்சேரிபுத்தூர் கிராம நிர்வாக அலுவலர்கள் பிரசாந்த் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.

Newsletter

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...

கோவையில் ரயில் மோதி 8 வயது பள்ளி மாணவர் உயிரிழப்பு

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் ரயில்வே தண்டவாளப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது பள்ளி மாணவர் பிரகதீஷ் மீது வெள்ளி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உலக தேனீ தினம் கொண்டாட்டம்

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 20ஆம் தேதி உலக தேனீ தினம் கொண்டாடப்படுகிறது. தேனீ வளர்ப்பு பயிற்சி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தக்காளி மற்றும் கற்றாழை மதிப்பூட்டல் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோவையில் தக்காளி மற்றும் கற்றாழையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் இரண...