தனியார் பொருட்காட்சி நடத்த உடுமலை குட்டை திடல் ரூ.65 லட்சத்திற்கு ஏலம்!

உடுமலை மாரியம்மன் கோயில் தேர்த் திருவிழா ஏப்ரல் 4ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில், அங்கு தனியார் பொருட்காட்சி நடத்த விடப்பட்ட ஏலத்தில் குட்டைத்திடல் ரூ.65.40 லட்சத்திற்கு ஏலம் போனது.


திருப்பூர்: உடுமலை குட்டை திடலில் தனியார் பொருட்காட்சி நடத்துவதற்காக ரூ.65.40 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை மாரியம்மன் கோயில் தேர்த் திருவிழா ஏப்ரல் 4ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி, தனியார் பொருட்காட்சி நடத்துவதற்காக குட்டைத் திடல் ஏலம் இன்று உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் கண்ணாமணி தலைமையில் நடைபெற்றது.



குறைந்தபட்ச ஏலத்தொகையாக ரூ.46 லட்சம் நிர்ணயிக்கப்பட்டது. இதில் நான்கில் ஒரு பங்கு தொகையான ரூ.11.50 லட்சத்தை அச்சாரத் தொகையாக செலுத்த வேண்டும் என வட்டாட்சியர் தெரிவித்திருந்த நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 11 பேர் அச்சார தொகையான 11.50 லட்சம் டி.டி எடுத்து ஏலத்தில் கலந்து கொண்டனர்.



சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த ஏலத்தின் முடிவில் வாணியம்பாடியை சேர்ந்த மோகன் என்பவர் ரூ.65 லட்சத்திற்கு 40 ஆயிரத்திற்கு குட்டை திடல் பகுதியில் பொருட்காட்சி அமைக்க ஏலம் எடுத்தார்.

கடந்தாண்டு குட்டை திடல் ரூ.41 லட்சத்திற்கு ஏலம் போன நிலையில் இந்தாண்டு கூடுதலாக ரூ.46 லட்சம் ஏல உரிமைத்தொகை நிர்ணயிக்கப்பட்ட நிலையில் பரபரப்பான ஏலம் மூலமாக ரூ.65 லட்சத்து 40 ஆயிரத்துக்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது

Newsletter

அன்னூர் அருகே 147 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த முதியவர் கைது.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே அனுமதியின்றி மது விற்பனைக்காக 147 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த 62 வயது முதியவரை போலீச...

கோவையில் மீன் பிடிக்கச் சென்ற 13 வயது மாணவன் கொலை; சக மாணவர்கள் 2 பேர் கைது

கோவை இருகூர் அருகே வாய்க்காலில் மீன் பிடிக்கச் சென்ற 7ஆம் வகுப்பு மாணவன், சக மாணவர்களால் மதுபாட்டிலால் தாக்கிக் கொலை செய...

Sri Ramakrishna மருத்துவமனையின் இரண்டு நாள் சுகாதார விழிப்புணர்வு கண்காட்சி Brookfield மாலில் தொடக்கம்

உலக ஆஸ்துமா தினம் மற்றும் உலக செரிமான ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு, Coimbatore Sri Ramakrishna மருத்துவமனை சார்பில் Brook...

“டாஸ்மாக் கடையை மூடுங்கள்” – கோவையில் பெண்கள், குழந்தைகள் திடீர் முற்றுகை போராட்டம்

கோவை: இருகூரில் இருந்து அத்தப்பகவுண்டன்புதூர் செல்லும் சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி 50-...

“நான் தான் எல்லாம்” எண்ணத்தில் எடப்பாடி செயல்படுகிறார்: செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நிலைப்பாடுகள் எம்....

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...