அடிப்படை வசதிகள் செய்து தராமல் புறக்கணிப்பு -கோவை மாநகராட்சியை கண்டித்து பொதுமக்கள் மேயரிடம் மனு!

கோவை காளப்பட்டி பெரியார் நகர் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தராமல் புறக்கணித்து வரும் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மேயர் கல்பனா ஆனந்தகுமாரிடம் பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. உடனடியாக மனு குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் உறுதியளித்தது.


கோவை: கோவை காளப்பட்டி பெரியார் நகரில் அடிப்படை வசதிகளை செய்து தராமல் புறக்கணிப்பதாக பொதுமக்கள் மேயரிடம் மனு அளித்துள்ளனர்.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட காளப்பட்டி பெரியார் நகர் பகுதியில் பல ஆண்டுகளாக எந்த வித அடிப்படை வசதியும் மேற்கொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 37 ஆண்டுகளில் ஒருமுறை மட்டுமே சாலைகள் போடப்பட்டுள்ளதாகவும், அதுவும் முறையான பராமரிப்பின்றி தற்போது மோசமான நிலையில் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.



இதேபோல், வடிகால் வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதியும் இல்லை எனக் கூறி, இப்பிரச்சனைக்கு உடனடித் தீர்வு காண வேண்டுமென வலியுறுத்தி மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையரிடம் மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் மனு அளித்தனர்.

இதனையடுத்து பேசிய அப்பகுதி மக்கள், தங்களது பகுதியில் உள்ள அரசு நிலங்கள் தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளதாகவும், இது தொடர்பாக மாநகராட்சி ஆணையரிடம் 3 முறை முறையிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தெரிவித்தனர்.

இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்புக் கூட்டத்தில், அடிப்படை வசதி மற்றும் ஆக்கிரமிப்பு பிரச்சனை உள்ளிட்ட அனைத்திற்கும் தீர்வு காண வலியுறுத்தி மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமாரிடம் மனு அளித்த காளப்பட்டி பெரியார் நகர் பகுதி மக்களிடம், மனு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் சார்பில் உறுதி அளிக்கப்பட்டது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...