உடுமலை திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

உடுமலை திருமூர்த்தி அணையிலிருந்து மக்காச்சோளம், காய்கறிகள் சாகுபடிக்கு இறுதியாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். திருப்பூர்: உடுமலை திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்தி அணை உள்ளது. இந்த அணைக்கு வனப்பகுதியில் உற்பத்தியாகும் ஆறுகள், ஓடைகள், மற்றும் பி.ஏ.பி. தொகுப்பு ஆகியவை முக்கிய நீராதாரமாக உள்ளது.



இதன் மூலமாக நீர்வரத்து ஏற்படுகிறது. அதைத் தொடர்ந்து பி.ஏ.பி. பாசன திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 2 மண்டலங்கள் வீதம் சுழற்சி முறையில் 4 மண்டலங்களுக்கு தண்ணீர் விநியோகம் நடைபெற்று வருகிறது.



இதன் காரணமாக கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. அத்துடன் தளி வாய்க்கால் மூலமாக ஏழு குளங்களை ஆதாரமாகக் கொண்டு பாசனம் நடைபெற்று வருகிறது.

இது தவிர பூலாங்கிணர், குடிமங்கலம், மடத்துக்குளம், உடுமலை, கணக்கம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் 3ஆம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதில் 94 ஆயிரத்து 362 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றன.

அதைத் தொடர்ந்து விவசாயிகள் மக்காச்சோளம் உள்ளிட்ட தானியங்கள், காய்கறிகள் சாகுபடி செய்து உள்ளனர். நீர் இருப்பு மற்றும் நீர்வரத்திற்கு ஏற்றவாறு சுழற்சி முறையில் மூன்று சுற்று தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 2 சுற்று தண்ணீர் திறந்துவிடப்பட்ட நிலையில் தற்போது, இறுதிச் சுற்று தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



அதன்படி காலை 8 மணி நிலவரப்படி 60 அடி உயரம் கொண்ட திருமூர்த்தி அணையில் 53.15 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 823 கன அடி தண்ணீர் வந்து கொண்டு உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு 147 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...