ஊதிய உயர்வு கோரி திருப்பூரில் பாத்திர தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!

பாத்திர உற்பத்தி தொழிலாளர்களுக்கு 2 ஆண்டுகளாக ஊதிய உயர்வு வழங்கப்படாத நிலையில், இதுதொடர்பான முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உரிய தீர்வு எட்டப்படாததால், திருப்பூர் அடுத்த அனுப்பர்பாளையம் பகுதியில் எவர் சில்வர் மற்றும் பித்தளை பாத்திர உற்பத்தி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தி திருப்பூர் அடுத்த அனுப்பர்பாளையம் பகுதியில் எவர் சில்வர் மற்றும் பித்தளை பாத்திர உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் பகுதியில் பாத்திர உற்பத்தி பிரசித்தி பெற்று விளங்குகிறது. இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் எவர்சில்வர் மற்றும் பித்தளை பாத்திரங்கள் உற்பத்தி செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படுகிறது.

பாத்திர உற்பத்தியை நம்பி 10,000-கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இப்பகுதியில் வசித்து வருகின்றனர். பாத்திர தொழிலாளர்கள் அதிக அளவில் உடல் உழைப்பை செலுத்தும் நிலையில் இவர்களுக்கான ஊதிய உயர்வு, கடந்த இரண்டு ஆண்டுகளாக அறிவிக்கப்படாமல் உள்ளது.



இதனை அடுத்து பித்தளை பாத்திர தொழிலாளர்களுக்கு 60% முதல் 70% வரை ஊதிய உயர்வும், அதே போல எவர் சில்வர் பாத்திர தொழிலாளர்களுக்கு 50 சதவிகித ஊதிய உயர்வும் தொழிற்சங்கம் சார்பில் கோரிக்கையாக வைக்கப்பட்டது.



தொடர்ந்து வருவாய் துறை தொழிலாளர் நலத்துறை மற்றும் பாத்திர உற்பத்தியாளர்கள் சங்கம் என முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், எவர்சில்வர் பாத்திர தொழிலாளர்களுக்கு 10 சதவிகித ஊதிய உயர்வும், பித்தளை பாத்திர தொழிலாளர்களுக்கு 15% ஊதிய உயர்வும் மட்டுமே கொடுக்க முடியும் என உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். இதனால் முடிவு எட்டப்படாமல் பேச்சுவார்த்தை தொடர்ந்து வருகிறது.



இந்நிலையில் ஊதிய உயர்வை சரியான முறையில் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து பாத்திர தொழிலாளர்கள் சங்கம் சார்பில் அனுப்பர்பாளையம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பாத்திர தொழிலாளர்கள் கலந்து கொண்டு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...