பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் குழு!

ஆஸ்கர் விருது பெற்ற தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் ஆவண குறும்படத்தின் இயக்குநர் கார்த்தகி கோன்சால்வெசு மற்றும் தயாரிப்பாளர் குனீத் மோங்கா ஆகியோர், டெல்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.



கோவை: முதுமலையில் யானைகளை பராமரிக்கும் பொம்மன் மற்றும் பெள்ளி தம்பதி குறித்து தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் ஆவண குறும்படம் எடுக்கப்பட்டது. இந்த குறும்படத்திற்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.

ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் ஆவண குறும்படத்தின் இந்த ஆவணப்படத்தை இயக்கிய கார்த்திகி கான்சால்வேஸ் மற்றும் தயாரித்த குனித் மோங்கா ஆகியோர் விருதை பெற்றுக்கொண்டனர்.

தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் ஆவண குறும்படம், முதுமலை தேசிய பூங்காவில் படமாக்கப்பட்டது. அனாதை யானையான ரகுவின் கதை. இந்த யானையை பொம்மா மற்றும் பெள்ளி என்ற தம்பதி பராமரித்து வந்தனர்.

இந்த ஆவணபடத்தில் யானை மற்றும் தம்பதியிடையேயான உறவு மற்றும் பாசப்பிணைப்பு மட்டும் படமாக்கப்படவில்லை. சுற்றியிருந்த இயற்கைச்சூழலும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.



இந்தப் படத்தின் இயக்குநர் கார்த்திகி கோன்சால்வெசு மற்றும் தாயாரிப்பாளர் குனீத் மோங்கா பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

இதற்கு முன்னதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை, இருவரும் சந்தித்து வாழ்த்து பெற்றனர். தமிழக அரசு சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதியும் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...