அலகுமலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த கிராம மக்கள் எதிர்ப்பு - திருப்பூர் ஆட்சியரிடம் மனு!

திருப்பூர் மாவட்டம் அலகுமலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தினால் ஆதார் கார்டு, குடும்ப அட்டை உள்ளிட்ட அரசு ஆவணங்களை ஒப்படைத்துவிட்டு வெளியூர் செல்ல தயாராக இருப்பதாக கூறி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


திருப்பூர்: அலகுமலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தக் கூடாது என பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



திருப்பூர் மாவட்டம் அலகுமலை ஊராட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. அலகுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் வசித்து வரும் நிலையில் ஒவ்வொரு முறையும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாகவே ஒரு காளைக்கு 15 நபர்கள் வருவதாகவும், இவர்கள் குடிபோதையில் அப்பகுதி பெண்கள் உட்பட பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபடுவதாகவும் இதை தட்டிக் கேட்பவர்களிடம் தரக்குறைவான வார்த்தைகளை பேசுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக இதுவே ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் நாள் அன்று போட்டியை காண வரும் ஆயிரக்கணக்கானோரில் சிலர், மதுபோதையில் குடியிருப்பு பகுதியில் சென்று மது அருந்துவதும், குடிபோதையில் வீட்டு வாசலில் அலங்கோல நிலையில் படுத்துள்ளனர்.



ஜல்லிக்கட்டு போட்டிகள் முடிந்த பிறகு கோவில் மற்றும் குடியிருப்பு பகுதி முழுவதும் மனித கழிவுகளால் நோய் பரவுவதாகவும், கடந்த இரண்டு முறையும் ஜல்லிக்கட்டு போட்டியின் போது காளைகள் ஊருக்குள் வந்து விட்டதாகவும், இதனால் குழந்தைகள் உட்பட பொதுமக்கள் அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் காளைகள் தாக்கியதில் இரண்டு பேர் காயம் ஏற்பட்டதாக குற்றம் சாட்டிய பொதுமக்கள், பலமுறை மாவட்ட நிர்வாகம் மற்றும் அமைச்சர் உள்ளிட்டோரிடம் ஜல்லிக்கட்டு போட்டி, நடத்தக் கூடாது என மனு அளித்தும், மாவட்ட நிர்வாகம் நடத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தும் பட்சத்தில், இப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் அரசு வழங்கிய குடும்ப அட்டை, ஆதார் கார்டு உள்ளிட்ட அரசு ஆவணங்களை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைத்துவிட்டு வெளியூர் செல்வதற்கு தயாராக இருப்பதாக கூறி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத்திடம் மனு அளித்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...