கோவையில் வழக்கறிஞர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை - போலீஸ் விசாரணை

கோவை நல்லாம்பாளையத்தில் வழக்கறிஞர் சுரேஷ்குமார் என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து ஒரு சவரன் தங்க நகை மற்றும் 40 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை நல்லாம்பாளையம் சபரி கார்டன் 6வது வீதியில் குடியிருந்து வருபவர் சுரேஷ்குமார். வழக்கறிஞரான இவர், தனது மனைவி மகள் ஆகியோருடன் கர்நாடக மாநிலத்தில் உள்ள உடுப்பி மூகாம்பிகா கோவில்களுக்கு சென்றனர்.

அப்போது, வீட்டின் மேல் புறம் குடியிருக்கும் வாட்ச்மேன் செடிகளுக்கு தண்ணீர் மற்றும் இரவு நேரங்களில் பார்த்துக் கொள்ள காம்பவுண்ட் கேட்டின் சாவியை கொடுத்து சென்றதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில், வாட்ச்மேன் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும்போது முன்புற கிரில் கதவில் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதையும், மேலும் வீட்டின் உள்ளே உள்ள மெயின் கதவு திறந்து கிடப்பதையும் பார்த்து உரிமையாளருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

உடனடியாக, உறவினர்களுக்கு தகவல் சொல்லி போலீசாருடன் சென்று பார்த்தபோது, வீட்டில் இருந்த மர பீரோ உடைக்கப்பட்டு ஒரு சவரன் நகை மற்றும் 40 ஆயிரம் ஆயிரம் பணம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இது தொடர்பாக துடியலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களைகளை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...