கிணத்துக்கடவில் சூறாவளிக்காற்றுடன் பெய்த கனமழை - 15,000 வாழை மரங்கள் சேதம்!

கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றிரவு சூறாவளிக் காற்றுடன் பெய்த பலத்த மழையால் 15,000 வாழை மரங்கள் அடியோடு சாய்ந்ததால் வேதனையடைந்த விவசாயிகள், வேளாண் துறையினர் முறையாக கணக்கீடு செய்து உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.


கோவை: கிணத்துக்கடவில் நேற்றைய தினம் சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் 15,000 வாழை மரங்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதியில் நேற்றிரவு சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.



இதன் காரணமாக கிணத்துக்கடவு அருகேயுள்ள பொட்டையாண்டிபுறம்பு, கல்லாபுரம், சிங்கையன் புதூர் ஆகிய பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட 15,000 வாழை மரங்கள் அடியோடு சாய்ந்து சேதம் அடைந்தன.



தண்ணீர் பற்றாக்குறை இருந்தாலும் சொட்டுநீர் பாசனம் மூலம் வளர்த்து பராமரிக்கப்பட்டு வந்த வாழை மரங்கள் ஒரு மணி நேரம் வீசிய காற்றில் அடியோடு சாய்ந்ததைக் கண்டு விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.



இந்நிலையில், வாழைத்தார்கள் இன்னும் இரண்டு மாதங்களில் அறுவடை செய்யும் நேரத்தில் வாழை மரங்கள் சேதம் அடைந்திருப்பது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்திருப்பதாகவும் எனவே வேளாண்மை துறை அதிகாரிகள் முறையாக கணக்கெடுத்து இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...