தாராபுரம் உப்பாறு அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக நாளை தண்ணீர் திறப்பு!

தாராபுரம் அருகேயுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் தேவைக்காகவும், அப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள நிலக்கடலை, பருத்தி உள்ளிட்ட பயிர்களுக்கு உயிர் தண்ணீர் வேண்டி விவசாயிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று உப்பாறு அணையில் இருந்து நாளை முதல் வரும் 10ஆம் தேதி தண்ணீர் திறந்து விட முடிவு செய்யப்பட்டுள்ளது.


திருப்பூர்: தாராபுரம் அருகேயுள்ள உப்பாறு அணையில் இருந்து நாளை முதல் வரும் 10ஆம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகேயுள்ள உப்பாறு அணை மூலம் சுமார் 6,060 ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடியாக பாசன வசதி பெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது உப்பாறு அணையில் இருந்து நாளை விவசாய பாசனத்திற்காகவும், குடிநீர் தேவைக்காகவும் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது.

இந்த தண்ணீர் திறப்பினால் சகுனிபாளையம், கெத்தல்ரேவ், வரப்பாளையம், நஞ்சிம்பாளையம், ஆலம்பாளையம் உள்ளிட்ட சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் தேவைக்காகவும் தற்போது பயிரிடப்பட்டுள்ள நிலக்கடலை, பருத்தி உள்ளிட்ட பயிர்களுக்கு உயிர் தண்ணீர் வேண்டியும் விவசாயிகள் தண்ணீர் திறந்து விட வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு உடனடியாக நாளை உப்பாறு அணையில் இருந்து பாசனத்திற்காகவும், குடிநீர் தேவைக்காகவும் வலது மற்றும் இடது கால்வாய்களுக்கு தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் நாளை இரண்டாம் தேதி முதல் வருகின்ற பத்தாம் தேதி வரை மொத்தம் 130.99 மில்லியன் கன அடி தண்ணீர் மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதனை தொடர்ந்து உப்பாறு அணையில் நாளை தண்ணீர் திறந்து விட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...

மேட்டுப்பாளையம் தொகுதியில் Kavitha Kalyanasundaram வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் Kavitha Kalyanasundar...

மேட்டுப்பாளையம் தொகுதி அதிருப்திக்குப் பிறகு ராஜினாமா: திமுக T R சண்முகசுந்தரம் தனியாக போட்டி?

குடும்ப சூழ்நிலை மற்றும் பணி சுமை காரணமாக திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் TR சண்முகச...

கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக வேட்பாளர் கனிமொழி வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கனிமொழி, சனிக்கிழமை கோட்டாட்சியர் வ...

கோவை வடக்கில் போட்டியிடும் வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி பதிவு

பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த கட்சித் தலைவர்களுக்கு நன்ற...