கொளுத்தும் கோடை வெயில் - கோவை குற்றால அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

. கோடை வெயிலில் இருந்து தப்பித்துக்கொள்ள பொதுமக்கள் பலரும் சுற்றுலா தலங்கள் மற்றும் நீர்வீச்சிகளுக்கு படையெடுத்து வரும் நிலையில், கோவை குற்றாலத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.


கோவை: கோடை வெயில் வாட்டி வரும் நிலையில் கோவை மட்டுமல்லாது வெளி மாவட்டங்களிலிருந்தும் வரும் சுற்றுலா பயணிகள் கோவை குற்றால அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.



தமிழகத்தில் கோடைக்காலம் 2 மாதங்களுக்கு முன்னதாகவே தொடங்கி விட்ட நிலையில் மாநிலம் முழுவதும் கோடை வெயில் வாட்டி வருகிறது. இந்நிலையில் கோடை வெயிலிலிருந்து தப்பித்து கொள்ளவும், குளுமையை அனுபவிக்கவும், சுற்றுலாத்தலங்கள் மற்றும் நீர்வீழ்ச்சிகளுக்கு அதிகளவில் மக்கள் படையெடுத்து வருகின்றனர்.



குறிப்பாக கோவையிலுள்ள சுற்றுலா தளமான கோவை குற்றால அருவிக்கு கோவை மட்டுமல்லாது வெளி மாவட்டங்கள் இருந்தும் பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் குழந்தைகளை அழைத்து வரும் பெற்றோர்கள் குற்றால அருவியில் குளித்து மகிழ்கின்றனர்.



மேலும் அருவியில் குளிக்கும் பயணிகள் மற்றும் பொது மக்களின் நலன் கருதி 20க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...