பொள்ளாச்சியில் அரசுப்பேருந்து மீது சொகுசு கார் மோதி விபத்து - புதுமாப்பிள்ளை சம்பவ இடத்திலேயே பலி!

பொள்ளாச்சி வால்பாறை சாலையில் அரசுபேருந்து மீது சொகுசு கார் மோதிய விபத்தில், அடுத்த வாரம் நிச்சயதார்த்தம் நடைபெறவிருந்த புதுமாப்பிள்ளை பாலாசுகேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சடலத்தை மீட்டு விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.



கோவை பகுதியைச் சேர்ந்தவர் பாலாசுகேஷ் (வயது23). இவர் கோவையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். பாலாசுகேஷுக்கும் பொள்ளாச்சி ஜமீன்கோட்டாம்பட்டி பகுதியைச் சேர்ந்த யாஷிகா (வயது23) என்ற பெண்ணிற்கும் அடுத்த வாரம் திருமண நிச்சயம் நடைபெற உள்ளது.

இந்நிலையில், நேற்று யாசிகாவை பார்க்க பொள்ளாச்சி வந்த பாலாசுகேஷ் வெளியில் சுற்றி பார்க்க செல்லலாம் என கூறியுள்ளார். இதையடுத்து, யாசிகா மற்றும் பாலாசுகேஷ் இருவரும் தனது சொகுசு காரில் ஆழியாரை சுற்றி பார்க்க சென்றனர்.



அப்போது வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வந்த அரசுப்பேருந்து மீது கார் கட்டுப்பாட்டை இழந்து மோதி விபத்துக்குள்ளானது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் விபத்தில் சிக்கிய இருவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால், படுகாயமடைந்த பாலாசுகேஷ் வழியிலேயே உயிரிழந்தார். யாஷிகாவிற்கு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டார்.

சம்பவ இடத்துக்கு வந்த ஆழியார் காவல்நிலைய போலீசார் பாலசுகேசின் உடலை பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த வாரத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெறவிருந்த நிலையில், மாப்பிள்ளை விபத்தில் உயிரிழந்த சம்பவம் இரு குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சி: குடிநீர் குறைகளை மண்டல வாரிய எண்களில் தெரிவிக்கலாம்

கோவை மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran, குடிநீர் விநியோகம் தொடர்பான குறைகளை மண்டல வாரியாக தெரிவிக்க பொதுமக்களுக்க...

கோவையில் ரூ.9.90 கோடியில் பாரா ஒலிம்பிக் உள் விளையாட்டு வளாகம் அமைக்கப்படுகிறது

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ஜீவா நகர் பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான உலகத்தரம் வாய்ந்த பா...

கோவை சிறைக்குள் தின்பண்டத்தில் மறைத்து கஞ்சா கடத்த முயற்சி : 4 பேர் மீது வழக்குப்பதிவு..!

கோவை மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு தின்பண்டங்களுக்குள் மறைத்து கஞ்சா கொடுக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளத...

கற்பகம் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு அவசரகால பயிற்சி

கோவையில் உள்ள கற்பகம் மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கான சந்திப்பையும் Basic Life Support மற்றும் அதிர்ச்சி சிகிச்...

கோவையில் ரயில்கள் மீது கல்வீச்சு சம்பவங்கள்: ஆர்.பி.எப் கண்காணிக்க நடவடிக்கை.

கோவையில் ரயில்கள் மீது தொடர்ந்து நடைபெற்று வரும் கல்வீச்சு சம்பவங்களை தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்புப் படையினர் (RPF) தண்...

கோவையில் 6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை : வேன் டிரைவர் போக்ஸோவில் கைது..!

கோவையில் 6 வயது சிறுமிக்கு பள்ளி வேன் டிரைவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் வே...