கோவையில் கஞ்சா, கஞ்சா சாக்லேட்டுகள் பதுக்கி வைத்து விற்பனை - 4 பேர் கைது!

பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், மெய்யரசன், புவனேஷ், பரத் மற்றும் லலித்குமார் ஆகியோரை கைது செய்து, 1050 கிராம் கஞ்சா, 3.2 கிலோ கஞ்சா சாக்லேட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.


கோவை: பெரியநாயக்கன்பாளையம் அருகே கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகளை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர்பெரியநாயக்கன் பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

அப்பகுதியில் உள்ள வளம் மீட்பு பூங்கா பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக கோவை பெரியநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்த மெய்யரசன், புவனேஷ், கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த பரத் மற்றும் வீரபாண்டி பிரிவைச் சேர்ந்த லலித்குமார் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும், அவர்களிடமிருந்து 1 கிலோ 50 கிராம் எடையுள்ள கஞ்சா, ரூ.30,000 மதிப்புள்ள 3 கிலோ 200 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா சாக்லேட்டுகள் மற்றும் 4 சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து வழக்குபதிவு செய்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...