பொள்ளாச்சி மாரியம்மன் கோயில் திருவிழா - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, சிவப்பு நிற பட்டுடுத்தி வெள்ளி தேரில் உலாவவந்த அம்மனை ஆயிரக்கணக்கான மக்கள் தரிசனம் செய்தனர்.



கோவை: பொள்ளாச்சி வாழ் மக்களின் காவல் தெய்வமாக விளங்கி வரும் பிரசித்தி பெற்ற மாரியம்மன் தேர் திருவிழா, கடந்த பங்குனி மாதம் முதல் செவ்வாய் கிழமை நோன்பு சாட்டுதலுடன் தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து, பக்தர்கள் பூவோடு எடுத்தும், அலகு குத்தியும் தங்களது நேர்த்தி கடனை செலுத்தி வந்தனர். நேற்று காலை மாவிளக்கு எடுத்து அம்மனை வழிபட்டனர்.



திருவிழாவின் முக்கிய நிகழ்வான மாரியம்மன் வெள்ளி தேரில் திருவீதி உலா நேற்றிரவு நடைபெற்றது. மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளித் தேரில் சிவப்பு நிற பட்டுடுத்தி அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.



இதனை ஆயிரக்கணக்கான மக்கள் பக்தியுடன் தரிசனம் செய்தனர். அதர்மத்தை நீக்கி தர்மத்தை நிலை நாட்ட மாரியம்மன் சிவப்பு நிற பட்டுடுத்தி உலகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் சுபிட்சத்தை அருளவும், அம்மன் கருணையால் மக்கள் எல்லா வளங்களும் பெறவேண்டியும் இந்த திருவீதி உலா நடைபெறுவதாக அர்ச்சகர் தியாகராஜன் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...