அரசு வேலை வாங்கித் தருவதாக பல லட்சம் ரூபாய் மோசடி - கோவையில் தாய், மகன் கைது

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிர்வாக பிரிவு அதிகாரி வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.36 லட்சம் வரையில் மோசடி செய்த வழக்கில், மேட்டுப்பாளையம் தாசனூரை சேர்ந்த மோகன்குமார், அவரது தாய் மணி என இருவரை கைது செய்தனர். இருவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தாசனூர் பகுதியை சேர்ந்தவர் மோகன்குமார்(வயது32). இவருடைய தாயார் மணி(வயது53). மனைவி சோபனா(வயது27). இவர்கள், தங்களுக்கு உயர் பதவியில் தெரிந்த நபர் இருப்பதால், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிர்வாக பிரிவு அதிகாரியாக வேலை வாங்கித்தருவதாக தெரிவித்துள்ளனர். இதனை நம்பி பலரும் லட்சக்கணக்கில் பணம் கொடுத்துள்ளனர்.

மேலும், வேலைக்கான போலி ஆணைகளையும் தயார் செய்து பணம் கொடுத்தவர்களிடம் கொடுத்தள்ளனர். இதனை, கோவை ஆட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு வந்தபோதுதான் அது போலியான ஆணை என்று தெரியவந்தது. இதையடுத்து, பணத்தை கொடுத்தவர்கள் அதனைத் திரும்பக் கேட்டும் அவர்கள் பணத்தை கொடுக்கவில்லை என்று தெரிகிறது.

மேலும், வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ஏராளமானவர்களிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்த பணத்தின் மூலம் வேன் மற்றும் கார்களை வாங்கி மோகன்குமார் வாடகைக்கு விட்டு வந்துள்ளார். இந்த மோசடி குறித்து கவுண்டம்பாளையத்தை சேர்ந்த பூபதி என்பவர் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். ரூ.36 லட்சத்து 7 ஆயிரத்தை பலரிடமும் வசூலித்து மோகன்குமாரிடம் கொடுத்ததாகவும் ,ஆனால் அவர் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் அந்த புகாரில் கூறியிருந்தார்.

இந்த மோசடி குறித்து மாவட்ட எஸ்.பி பத்ரிநாராயணன் உத்தரவின்பேரில், ஆய்வாளர் ராஜேஸ்வரி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்றது. இந்நிலையில் தலைமறைவாக இருந்த மோகன்குமார், அவருடைய தாயார் மணி ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். ரூ.20 லட்சம் மதிப்புள்ள வேன் பறிமுதல் செய்யப்பட்டது. இவருடைய மனைவி சோபனாவிடமும் விசாரணை நடைபெற்றுவருகிறது.

இந்த மோசடிக்கு பயன்படுத்திய போலி ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. தாயும், மகனும் மேலும் பலரிடம் இதுபோன்ற மோசடியை அரங்கேற்றியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதோடு, கைதான தாய், மகன் ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...

கோவை கண்ணப்பநகரில் அண்ணாமலை தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியின் கண்ணப்பநகர் பகுதியில் தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் K.Annamalai, அதிமுக கோவை வடக்...

பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், தீவிர பிரச்சாரத்தால் ஏற்பட்ட காலில் வலி மற்று...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

தொண்டாமுத்தூர்: திமுக வேட்பாளர் என்.ஆர். கார்த்திகேயன் வெற்றிக்காக கட்சியினர் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் – செந்தில் பாலாஜி

தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டத்தில், கூட்டணிக் கட்சிகளின் நிர்வ...