தாராபுரம் காவல் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்!

தாராபுரம் வட்டத்துக்குட்பட்ட காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 86 பைக்குகள், திருப்பூர் மாவட்ட எஸ்பி சிசாங் சாய் உத்தரவின் பேரில், தாராபுரம் வட்டாட்சியர் ஜெகஜோதி முன்னிலையில், ஒரு லட்சத்து 71 ஆயிரத்து 50 ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது.


திருப்பூர்: தாராபுரம் தாலுகாவுக்குட்பட்ட காவல் நிலையங்களில் பறிமுதல் செய்யப்பட்ட பைக்குகள் இன்று ஏலம் விடப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டத்துக்குட்பட்ட தாராபுரம், மூலனூர், அலங்கியம் மற்றும் குண்டடம் காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடையதாக 86 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டு அந்தந்த காவல் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இந்த பைக்குகளுக்கு யாரும் உரிமை கோராததால், திருப்பூர் மாவட்ட எஸ்பி சிசாங் சாய் உத்தரவின் பெயரில், தாராபுரம் வட்டாட்சியர் ஜெகஜோதி முன்னிலையிலும், தாராபுரம் டிஎஸ்பி தனராசு, காவல் ஆய்வாளர் மணிகண்டன் ஆகியோர் மேற்பார்வையிலும், தாராபுரம் காவல் நிலையத்தில் வைத்து பகிரங்க ஏலம் நடைபெற்றது.

இந்த ஏலத்தில் 86 வாகனங்களும் ஒரு லட்சத்து 71 ஆயிரத்து 50 ரூபாய்க்கு ஏலம் போனது. இந்த ஏலத்தில் திருப்பூர்,கோவை,மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதியிலிருந்து ஏராளமான மொத்த விற்பனையாளர்கள் மற்றும் தாராபுரம் சுற்றுவட்டாரப் பகுதியிலிருந்து பொதுமக்கள் ஏலத்தில் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...