கோத்தகிரியில் குடியிருப்பு பகுதியில் சிறுத்தை உலா - பொதுமக்கள் அச்சம்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பெரியார் நகர் குடியிருப்பு பகுதியில் அடிக்கடி உலா வரும் வனவிலங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்ற அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


நீலகிரி: கோத்தகிரியில் இருந்து அரவேணு செல்லும் சாலையில் உள்ள பெரியார் நகர் பகுதியில் அடிக்கடி சிறுத்தை கரடி நடமாட்டம் இருந்து வருகிறது.

இதனிடையே நேற்று நள்ளிரவு சிறுத்தை ஒன்று உலா வந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி, அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

அடிக்கடி உலாவரும் கரடி, சிறுத்தை போன்ற வனவிலங்குகளால் கிராம மக்கள், வெளியே செல்ல இயலாமல் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இரண்டு கருஞ்சிறுத்தைகள், இரண்டு சிறுத்தைகள், மூன்று கரடிகள் இதே பகுதியில் உலா வந்தன.



தற்போது சிறுத்தை நடமாடி வந்த காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

குடியிருப்பு பகுதியில் அடிக்கடி உலா வரும் வனவிலங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்ற அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...