வால்பாறை - பொள்ளாச்சி சாலையை மறித்த யானைகளால் பரபரப்பு

வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் உள்ள புதுதோட்டம் எஸ்டேட் பகுதியில் வனப்பகுதியிலிருந்து மூன்று காட்டு யானைகள் தண்ணீர் தேடி சாலையை கடந்து சென்றது. அப்போது அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சாலையில் நின்ற யானைகளை பார்த்து பயந்து வாகனங்களை நிறுத்தியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


கோவை: வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் மூன்று காட்டு யானைகள் சாலையை மறித்து நின்றதால் வாகன ஓட்டிகள் பயந்து வாகனங்களை நடுவழியிலேயே நிறுத்தினர்.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. காட்டு யானைகள் வனப்பகுதியிலிருந்து வெளியேறி தேயிலை தோட்டங்களிலும், வனப்பகுதி சாலை ஓரங்களிலும் சுற்றி வருகிறது.



தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், ஆறுகளில் தண்ணீர் வரத்து குறைந்து காணப்படுகிறது. மேலும் வனப்பகுதிக்குள் தண்ணீர் இல்லாததால் வனவிலங்குகள், தண்ணீர் தேடி அங்கும் இங்கும் அலைந்து திரிகிறது.

இந்நிலையில் வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் உள்ள புது தோட்டம் எஸ்டேட் பகுதியில் வனப்பகுதியிலிருந்து மூன்று காட்டு யானைகள் தண்ணீர் தேடி சாலையை கடந்து சென்றது. அப்போது அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சாலையில் நின்ற யானைகளை பார்த்து பயந்து வாகனங்களை நிறுத்தினர்.



சிறிது நேரம் கழித்து காட்டு யானைகள் சாலையை கடந்து தண்ணீர் இருக்கும் இடத்திற்கு சென்று தண்ணீர் குடித்து நின்றது. இதை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். பின்பு காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் சென்றது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...