கோவையில் கல்லூரி மாணவிகளை செல்போனில் படம் பிடிப்பு - கடை உரிமையாளருக்கு தர்மஅடி!

கோவை பி.என்.பாளையத்தில் ஸ்டேஷ்னரி கடை நடத்தி வரும் ராமு என்பவர், கடைக்கு வரும் கல்லூரி மாணவிகள், பெண்களை தனது செல்போனில் படம் பிடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அப்பகுதி மக்கள், கடை உரிமையாளர் ராமுவை விரட்டிப்பிடித்து தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.


கோவை பி.என்.பாளையத்தை சேர்ந்தவர் ராமு (வயது41). இவர் வீட்டின் அருகே ஸ்டேஷ்னரி கடை நடத்தி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி, மனைவி இறந்த நிலையில் தனது 21 வயது மகளுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று மதியம் இவரது கடைக்கு வந்த தனியார் கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வரும் தயாநிதிமாறன் என்ற மாணவர் ஜெராக்ஸ் எடுத்துள்ளார். அப்போது, ராமுவின் செல்போனில் கல்லூரி மாணவரின் வகுப்பில் படிக்கும் புகைப்படம் இருந்துள்ளது.

இதைக்கண்ட மாணவர் அந்த செல்போனை எடுத்து கொண்டு வெளியே வந்தார். மேலும், செல்போனை பார்த்தபோது கடைக்கு வந்த ஏராளமான மாணவிகள் மற்றும் பெண்களின் புகைப்படத்தை எடுத்து வைத்திருந்தது தெரியவந்தது.

இது குறித்து கல்லூரி மாணவர் கடை உரிமையாளரான ராமுவிடம் கேட்டபோது, ராமு அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றார். அங்கு வந்த பொதுமக்கள் விரட்டி பிடித்து ராமுவை கடுமையாக தாக்கி பந்தயசாலை போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசாரின் விசாரணையில் ராமு தனது கடைக்கு வரும் மாணவிகள், பெண்களை செல்போனில் படம் எடுத்து கடையில் யாரும் இல்லாத நேரத்தில் பார்த்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரது செல்போனை பறிமுதல் செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...