ராமநவமி ஊர்வல வன்முறை மற்றும் இத்ரீஸ் பாஷா கொலையை கண்டித்து கோவையில் SDPI ஆர்ப்பாட்டம்

வடமாநிலங்களில் ராமநவமி ஊர்வலத்தின் போது நடைபெற்ற வன்முறை தாக்குதலை கண்டித்தும், கர்நாடகாவில் மாடுகளை ஏற்றி சென்ற இத்ரீஸ் பாஷா கொல்லப்பட்டதை கண்டித்தும் கோவையில் SDPI கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: வடமாநிலங்களில் ராமநவமி ஊர்வலத்தின் போது நடைபெற்ற வன்முறை தாக்குதலை கண்டித்து கோவையில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அண்மையில் பீகாரில் நடைபெற்ற ராம நவமி ஊர்வலத்தின் போது இரு மதப் பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. சசாராம் பகுதியில் இரு தரப்பினரும் கல்வீச்சுத் தாக்குதலில் ஈடுபட்டனர். வாகனங்களுக்குத் தீவைக்கப்பட்டன.

இந்த வன்முறையில் ஒருவர் உயிரிழந்ததோடு பலர் காயமடைந்தனர். அதையடுத்து மாநிலத்தின் பதற்றமான இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, காவல்துறை கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டது.

மேலும் சில தினங்களுக்கு முன் சாந்தனூர் காவல் நிலையம் அருகே மாடுகளை ஏற்றிச்சென்ற போது பசு பாதுகாப்புக்குழு என்ற கும்பல் இத்ரீஸ் பாஷா உட்பட சிலர் மீது தாக்குதல் நடத்தியது. இதில் இத்ரீஸ் பாஷா உயிரிழந்தார்.



இந்த இரண்டு சம்பவங்களை கண்டித்து கோவை உக்கடம் பகுதியில் SDPI கோவை மத்திய மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பெண்கள் உட்பட சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு இச்சம்பவங்களை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...