கோவை ரேஸ்கோர்ஸில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்..! - மாநகர போலீசார் உறுதி!

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உதவி ஆணையர் சுரேஷ்குமார் தலைமையில் பொதுமக்களின் குறைகளை கேட்டறியப்பட்டது. அப்போது மக்களின் கோரிக்கையை ஏற்று அப்பகுதியில் கூடுதல் சிசிடிவி கேமராக்கள் மற்றும் சாலைகளில் பேரிகாடுகள் அமைக்கப்படும் என மாநகர போலீசார் உறுதி அளித்தனர்.


கோவை: ரேஸ்கோர்ஸ் பகுதியில் கூடுதல் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என மாநகர காவல் துறை உறுதி அளித்துள்ளது.

கோவை மாநகரம் முழுவதும் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் முக்கியமான வீதிகள், குடியிருப்புகளில் போலீசார் கண்காணிப்பை தீவிர படுத்தியதோடு, அப்பகுதி மக்களின் குறைகளையும் கேட்டு நிவர்த்தி செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.



அதன்அடிப்படையில் கோவை ரேஸ்கோர்ஸ் ஜி.டி வீதியில் உள்ள குடியிருப்பில் உதவி ஆணையர் சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார் அப்பகுதி குடியிருப்பு மக்களுடன் கலந்துரையாடினர். அப்போது அங்குள்ள பிரச்சினைகள் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்தனர்.



இந்த நிலையில் அப்பகுதி மக்கள் சார்பாக ரேஸ்கோர்ஸ் ரகுநாத்,போலீசாரிடம் கோரிக்கை மனு ஒன்றை வழங்கினார். அதில் ரேஸ்கோர்ஸ் பகுதியில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும், பார்க்கிங் பிரச்சனை உள்ளதால் பார்க்கிங் அமைத்துக் கொடுக்க வேண்டும்.

ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபயிற்சி செல்வோருக்கு நேர கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

இதை அடுத்து பேசிய உதவி ஆணையர் சுரேஷ் குமார் கூறியதாவது, மக்களின் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கண்காணிப்பு கேமராக்கள், பேரிகாடுகள் மூலம் பார்க்கிங் ஏற்பாடுகள் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...

சிங்காநல்லூர் தொகுதியில் MGR வேடத்தில் வாக்கு சேகரித்த AIADMK வேட்பாளர் கே ஆர். ஜெயராம்

சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram MGR வேடமனிந்து நந்தா நகர், திருக்குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி...

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...