கோவை சூலக்கல் மாரியம்மன் கோவில் பாதிக்காத வகையில் சாலை பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தல்!

கோவை சுங்கம் பகுதியில் பைபாஸ் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சாலைக்கு அருகே உள்ள சூலக்கல் மாரியம்மன் கோவிலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சாலை பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை அளித்துள்ளனர்.


கோவை: சுங்கம் அருகே உள்ள சூலக்கல் மாரியம்மன் கோவில் பாதிக்காத வகையில் சாலை பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தி பொதுமக்கள் ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை அளித்துள்ளனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தலைமை தாங்கி மனுக்களை பெற்றார்.

அப்போது தியாகி சிவராம் நகர் பகுதி பொதுமக்கள் சார்பில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது,

எங்கள் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம்.எங்கள் பகுதியில் 50 வருடங்களுக்கு மேலாக சுங்கம் சூலக்கல் மாரியம்மன் கோவில் உள்ளது.

இந்த நிலையில் சுங்கம் பைபாஸ் ரோட்டின் பக்கவாட்டில் சர்வீஸ் சாலை அமைக்க உள்ளதாக தெரிகிறது. இந்த சர்வீஸ் சாலை அமைக்கும் பொழுது கோவிலுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாமல் இருக்கும் வகையில் சாலைப் பணிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.

இதேபோல் ஸ்ரீ கிருஷ்ண சேனா மக்கள் இயக்கம் சார்பில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது,தடாகம் சாலையில் கடந்த ஓராண்டு காலமாக சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சாலையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளும், 20 தொழிற்சாலைகளும் இயங்கி வருகிறது.

இதில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும், தொழிற்சாலை செல்லும் தொழிலாளர்களுக்கும் இந்த சாலையில் சென்று வருவது பெரிய சவாலாகவே உள்ளது. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்வோருக்கு அவ்வப்போது விபத்துகள் நடக்கிறது.

மேலும் கோவில்மேடு பகுதியில் டாஸ்மாக் கடை 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. இது பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. எனவே இந்த சாலை பணியை பள்ளி விடுமுறை காலம் முடிந்து தொடங்குவதற்கு முன் உடனடியாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.

Newsletter

“நான் தான் எல்லாம்” எண்ணத்தில் எடப்பாடி செயல்படுகிறார்: செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நிலைப்பாடுகள் எம்....

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...