பல்லடம் அருகே திருமண அலங்கார பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்துக்கு பொதுமக்கள் எதிர்ப்பு!

பல்லடம் அருகே வே.கள்ளிப்பாளையத்தில் ஊருக்கு நடுவே இயங்கும் திருமண அலங்கார பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தால் கடும் பாதிப்பு ஏற்படுவதாகவும், நிறுவனத்தை அப்புறப்படுத்த கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.



திருப்பூர்: பல்லடம் அருகே திருமண அலங்கார பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தை அப்புறப்படுத்த கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வே.கள்ளிப்பாளையத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி.



இவருக்கு இரண்டு மகன்களில், சம்பத்குமார் என்பவர் மூளை வளர்ச்சி குன்றியவர் என்பதால் வீட்டிலேயே உள்ளார்.



இவரது வீட்டிற்கு அருகில் சீமான் என்பவர் கண்ணாடி துகள்களை பயன்படுத்தி திருமண அலங்கார பொருட்கள் தயார் செய்யும் கம்பெனி நடத்தி வருவதால், தனது மகனுக்கும், அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கும் சுவாசக் கோளாறு, தோல் வியாதிகள் ஏற்படுவதாக புகார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கடந்த நான்கு மாதங்களாக மாவட்ட ஆட்சியர், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் ஊராட்சி தலைவரிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், குடியிருப்பு பகுதிக்கு தொழில் செய்ய எந்தவித அனுமதியும் பெறாமல் சட்ட விரோதமாக இயங்கி வரும் இந்த நிறுவனத்தை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...