கோவையில் குடிபோதையில் தாய், சகோதரியை தாக்கிய வாலிபர் கைது!

கோவை குனியமுத்தூரைச் சேர்ந்த மணிகண்டன், குடிபோதைக்கு அடிமையான இவர், குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து தாய் தனலெட்சுமியிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது தட்டிக்கேட்ட சகோதரியையும் தாக்கியுள்ளார். இவரை குனியமுத்தூர் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


கோவை: குனியமுத்தூரில் குடிபோதையில் தாய், சகோதரியை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கோவை குனியமுத்தூர் மாரியம்மன் கோயில் வீதியை சேர்ந்த தம்பதி நடராஜ்-தனலட்சுமி (60). இவர்களது இளைய மகன் மணிகண்டன் (34). குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர் தினந்தோறும் குடித்துவிட்டு, தாய் தனலட்சுமியை மிரட்டி பணம் வாங்கி செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

இந்நிலையில் நேற்று வழக்கம் போல் குடிபோதையில் வீட்டுக்கு வந்த மணிகண்டன், தாய் தனலட்சுமியைத் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, தாக்கியுள்ளார். தடுக்கச் சென்ற அவரது அக்காவையும் குடிபோதையில் தாக்கியுள்ளார். இதை அடுத்து தனலட்சுமி குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் மணிகண்டன் மீது வன்கொடுமை தடுப்பு உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர். இதையடுத்து அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...