உடுமலை மாரியம்மன் கோவில் நன்கொடை பெறுவதில் முறைகேடு - தூக்கத்தில் நடந்த தவறு என அதிகாரி விளக்கம்!

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நன்கொடை வழங்கும் இடத்தில் ரூ.200 நன்கொடை வழங்கினால் ரூ.100க்கான ரசீது வழங்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இரவு பகலாக ஊழியர்கள் உறக்கமின்றி வேலை செய்ததால் தவறு நிகழ்ந்து விட்டதாக செயல் அலுவலர் சினிவாசன் விளக்கம் அளித்துள்ளார்.


திருப்பூர்: உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நன்கொடை பெறுவதில் நடைபெற்ற தவறு தூக்கத்தில் நிகழ்ந்ததாக அதிகாரி விளக்கம் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 28ஆம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கிய நிலையில் வரும் ஏப்ரல் 13ஆம் தேதி தேர் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.

இந்த நிலையில் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு நன்கொடை வழங்கும் இடத்தில் ரூ.200 நன்கொடை வழங்கினால் ரூ.100க்கான ரசீது வழங்கப்பட்டு முறைகேடு நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.



இதுதொடர்பாக உடுமலை இந்து சாம்ராஜ்யம் நிறுவனத் தலைவர் சக்திவேல் தலைமையில் செயல் அலுவலர் சினிவாசனிடம், இதுகுறித்து நேரில் விளக்கம் கேட்கப்பட்டது.

அப்பொழுது பேசிய அவர், இரவு பகலாக ஊழியர்கள் பணியாற்றி வருவதால் தூக்க கலக்கத்தில் சிறு தவறு ஏற்பட்டு விட்டது. இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இனி பார்த்துக் கொள்ளப்படும் என்று புது விளக்கம் அளித்துள்ளார்.

தூக்கத்தில் இருந்த காரணத்தால் தவறு ஏற்பட்டு விட்டது என செயல் அலுவலர் சினிவாசன் விளக்கம் ஏற்கக் கூடியது அல்ல. உரிய விசாரணை நடத்த வேண்டும் என பக்தர்கள் தரப்பில் மீண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை வடக்கு-பீளமேடு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணி வைத்த இருவர் கைது

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த வழக்கில் ரயில்வே பாதுகாப்புப்...

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (52) தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததோடு, 4 கிலோ கஞ்சா வ...

பொள்ளாச்சி ஆழியாறு பகுதியில் மது போதையில் தள்ளி இளைஞர் கொலை - குற்றவாளி கைது

பொள்ளாச்சி வட்டம் ஆழியாறு நெல்லித்துறை பகுதியில் குடும்ப பூசல் காரணமாக மது போதையில் வந்த ஆனந்த் என்பவர் பாலகிருஷ்ணனை தள்...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பு தோன்றி பரபரப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் அறையில் நேற்று எதிர்பாராதவிதமாக பாம்பு ஒன்று தோன்றியதால் பரபரப்...

மூளைச்சாவடைந்த இளைஞரின் உறுப்பு தானம் மூவருக்கு புதுவாழ்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள வெஞ்சமடை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் கருப்புசாமி மே 10ஆம் தேதி இருசக்...

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...