பொதுமக்களை மிரட்டி பணம் பறிக்கும் நபர் - திருப்பூர் மாவட்ட எஸ்.பியிடம் புகார்

திருப்பூர் கணக்கம்பாளையம் பகுதியில் பொதுமக்களை மிரட்டி பணம் பறிக்கும் தினேஷ் என்பவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



திருப்பூர்: திருப்பூர் அருகே பொதுமக்களை மிரட்டி பணம் பறிக்கும் நபர் மீது நடவடிக்கை எடுக்ககோரி மாவட்ட எஸ்.பியிடம் பொதுமக்கள் புகார் அளித்தனர்.

திருப்பூர் மாவட்டம் கணக்கம்பாளையம் பகுதியில் ஏராளமான குடும்பங்கள் 30 வருடங்களுக்கு மேலாக வசித்து வருகின்றன.

அதேபகுதியில் வசிக்கும் கருப்பண்ணசாமி என்கிற தினேஷ் கடந்த சில வருடங்களாக கணக்கம்பாளையம் பகுதியில் உள்ள குடும்பங்களின் பலவீனங்களை அறிந்து கொண்டு தொலைபேசியிலும் நேரிலும் மிரட்டி பணம் பறிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும், பணம் கொடுக்க மறுப்பவர்களை கஞ்சா விற்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்து, கைது செய்ய வைப்பேன் அல்லது வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசுவேன் என கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து, பெருமாநல்லூர் காவல்நிலையத்தில் அப்பகுதி மக்கள் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிகிறது.

இந்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்த கணக்கம்பாளையம் பகுதி மக்கள், பிரச்சனை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து, தங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

Newsletter

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...

கோவில்மேட்டில் டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆட்சியரிடம் மனு

Coimbatore: கோவை கோவில்மேடு பகுதியில் பேருந்து நிறுத்தம், பள்ளி மற்றும் மருத்துவமனை அருகே செயல்பட்டு வரும் இரண்டு டாஸ்மா...

அன்னூர் அருகே 147 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த முதியவர் கைது.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே அனுமதியின்றி மது விற்பனைக்காக 147 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த 62 வயது முதியவரை போலீச...