கோவையிலிருந்து மதுரைக்கு சென்ற அரசு பேருந்து நடத்துநருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் பரபரப்பு!

கோவையிலிருந்து மதுரைக்கு சென்ற அரசுப் பேருந்து பல்லடம் பேருந்து நிலையம் அருகே வந்த போது பணியில் இருந்த நடத்துநர் சீனி என்பவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், பயணிகள் உதவியுடன் அவர் பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


திருப்பூர்: கோவையிலிருந்து மதுரைக்கு சென்ற அரசுப் பேருந்து நடத்துநருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால், பயணிகள் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியைச் சேர்ந்த ராம்ராஜ் என்ற அரசுப் பேருந்து ஓட்டுநரும், மதுரையை சேர்ந்த பேருந்து நடத்துநர் சீனி என்பவரும் இன்று காலை மதுரை புறநகர் பேருந்து பணிமனையிலிருந்து கோவைக்கு வந்துள்ளனர். மீண்டும் கோவையிலிருந்து மதுரை நோக்கி பயணிகளுடன் சென்ற போது, பல்லடம் பேருந்து நிலையம் அருகே நடத்துநர் சீனிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.



இதைக் கண்ட ஓட்டுநர் ராமராஜ் மற்றும் பேருந்தில் பயணித்த பயணிகள் உடனடியாக பேருந்தை பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.



பல்லடம் அரசு மருத்துவமனையில் நடத்துநர் சீனி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இது குறித்து ஓட்டுநர் ராமராஜிடம் விசாரித்த போது, நடத்துநர் சீனி கடந்த வாரம் முழுவதும் டெல்லியிலிருந்ததாகவும் நேற்று மதுரை திரும்பிய நிலையில், ஒரு நாள் விடுப்பு கேட்டதாகவும், பணிமனை மேலாளர் விடுப்பு அளிக்க மறுத்ததால் சீனி பணிக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.

காலை முதலே நடத்துநர் சீனி மிகுந்த சோர்வுடன் காணப்பட்டதாகவும், திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. சரியான நேரத்தில் பேருந்து ஓட்டுநர் ராமராஜ், நடத்துநர் சீனியை பயணிகளோடு மருத்துவமனைக்கு அழைத்து வந்து சேர்த்ததால் சீனி உயிர் பிழைத்துள்ளார் என மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் நடத்துநர் சீனியை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...