கோவையிலிருந்து மதுரைக்கு சென்ற அரசு பேருந்து நடத்துநருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் பரபரப்பு!

கோவையிலிருந்து மதுரைக்கு சென்ற அரசுப் பேருந்து பல்லடம் பேருந்து நிலையம் அருகே வந்த போது பணியில் இருந்த நடத்துநர் சீனி என்பவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், பயணிகள் உதவியுடன் அவர் பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


திருப்பூர்: கோவையிலிருந்து மதுரைக்கு சென்ற அரசுப் பேருந்து நடத்துநருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால், பயணிகள் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியைச் சேர்ந்த ராம்ராஜ் என்ற அரசுப் பேருந்து ஓட்டுநரும், மதுரையை சேர்ந்த பேருந்து நடத்துநர் சீனி என்பவரும் இன்று காலை மதுரை புறநகர் பேருந்து பணிமனையிலிருந்து கோவைக்கு வந்துள்ளனர். மீண்டும் கோவையிலிருந்து மதுரை நோக்கி பயணிகளுடன் சென்ற போது, பல்லடம் பேருந்து நிலையம் அருகே நடத்துநர் சீனிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.



இதைக் கண்ட ஓட்டுநர் ராமராஜ் மற்றும் பேருந்தில் பயணித்த பயணிகள் உடனடியாக பேருந்தை பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.



பல்லடம் அரசு மருத்துவமனையில் நடத்துநர் சீனி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இது குறித்து ஓட்டுநர் ராமராஜிடம் விசாரித்த போது, நடத்துநர் சீனி கடந்த வாரம் முழுவதும் டெல்லியிலிருந்ததாகவும் நேற்று மதுரை திரும்பிய நிலையில், ஒரு நாள் விடுப்பு கேட்டதாகவும், பணிமனை மேலாளர் விடுப்பு அளிக்க மறுத்ததால் சீனி பணிக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.

காலை முதலே நடத்துநர் சீனி மிகுந்த சோர்வுடன் காணப்பட்டதாகவும், திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. சரியான நேரத்தில் பேருந்து ஓட்டுநர் ராமராஜ், நடத்துநர் சீனியை பயணிகளோடு மருத்துவமனைக்கு அழைத்து வந்து சேர்த்ததால் சீனி உயிர் பிழைத்துள்ளார் என மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் நடத்துநர் சீனியை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் - நெல்லித்துறை சாலையில் தாறுமாறாக நிறுத்தப்படும் கனரக வாகனங்கள் : பக்தர்கள், வாகன ஓட்டிகள் அவதி..!

மேட்டுப்பாளையம் - நெல்லித்துறை சாலையில் உருளைக்கிழங்கு மற்றும் பூண்டு மண்டிகளுக்கு வரும் கனரக லாரிகள் தாறுமாறாக நிறுத்தப...

காரமடை அருகே கிணற்றில் தவறி விழுந்த காட்டுப்பன்றிகள் - பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறை..!

காரமடை அருகே 60 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த தாய் மற்றும் குட்டி காட்டுப்பன்றிகளை, தீயணைப்புத்துறையினர் மற்றும் வன...

Flights Temporarily Diverted to Kochi After Compound Wall Collapse Near Coimbatore Airport

Following heavy rain and strong winds in Coimbatore today evening, a section of the compound wall near Coimbatore Intern...

கனமழை எதிரொலி: கோவை விமான நிலைய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் விமானங்கள் கொச்சிக்கு திருப்பி விடப்பட்டது

கோவையில் பெய்த கனமழை மற்றும் பலத்த காற்றால் சின்னியம்பாளையம் அருகே கோவை சர்வதேச விமான நிலைய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்...

“Jayalalithaa’s Soul Is Punishing the AIADMK,” Says TVK Minister Sengottaiyan in Coimbatore

TVK Minister Sengottaiyan  launched a sharp attack on the AIADMK, stating that the party’s ongoing internal turmoil was...

Simplicity News Impact: Coimbatore Airport Authorities Restore Drinking Water Facility

Passengers and members of the public appreciated the swift action taken by airport authorities to restore the malfunctio...