கோவை அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த குட்டி யானை!

கோவை அடுத்த நாயக்கன்பாளையம் பகுதியில் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து குட்டி யானை ஒன்று உயிரிழந்த நிலையில், வனத்துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம் தொட்டியை உடைத்து குட்டி யானையை மீட்டு உடற்கூறாய்வு செய்து புதைத்தனர்.



கோவை: கோவை அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்து குட்டி யானை ஒன்று உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை பெரிய நாயக்கன்பாளையம் வனத்துறைக்கு உட்பட்ட பாலமலை செல்லும் வழியில் நாயக்கன் பாளையம் கிராமம் உள்ளது அந்த கிராமப் பகுதியில் நடிகர் சத்யராஜின் தங்கை அபராஜிதா என்பவருக்கு சொந்தமான தோட்டத்து வீட்டின் வெளியே கீழ்நிலை நீர் தேக்க தொட்டி உள்ளது.

இந்த தொட்டியில் வனப் பகுதியில் உள்ள யானைகள் அவ்வப்போது வந்து தண்ணீர் குடித்து செல்வது வழக்கமாக இருந்துள்ளது. இந்நிலையில், அதுபோல 3 நாட்களுக்கு முன்பு தண்ணீர் குடிக்க வந்த இளம் வயது உடைய ஒரு குட்டி யானை ஒன்று அந்த தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து இறந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்து கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ், மண்டல உதவி வன பாதுகாவலர் செந்தில்குமார், பெரிய நாயக்கன்பாளையம் வன அலுவலர் செல்வராஜ் உள்ளிட்ட வன அலுவலர்கள், மருத்துவர் சுகுமார் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு வருகை தந்தனர்.

இதனையடுத்து, இறந்த யானையை மீட்க முயன்ற போது, 11 யானைகள் அடங்கிய கூட்டம் அங்கு வந்தது. மேலும் இரவு என்பதால் உடனடியாக இறந்த யானையை மீட்க முடியவில்லை.



இந்த நிலையில் இன்று காலை 9 மணியளவில் இறந்த யானையை எடுக்க பொக்லைன் எந்திரம் மூலம் தண்ணீர் தொட்டியை உடைத்து வலை மூலம் இறந்த குட்டி யானையை மீட்டனர்.



அதன்பிறகு குட்டி யானையை பொக்லைன் எந்திரத்தில் போட்டு அங்கிருந்து வனப்பகுதிக்கு கொண்டு சென்றனர்.



அங்கு யானையை உடற்கூறு ஆய்வு மேற்கொண்டு யானையின் உடலை புதைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...