என்.டி.சி ஆலைகள் விவகாரம் - ஏப்.20ம் தேதி கஞ்சி காய்ச்சும் போராட்டம் அறிவிப்பு

கோவை உட்பட தமிழகம் முழுவதும் உள்ள 7 என்டிசி நூற்பாலைகளில் உற்பத்தி தொடங்காததை கண்டித்து வரும் ஏப்.20ம் தேதி கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்த அனைத்துத் தொழிற்சங்கங்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் என்டிசி நூற்பாலைகளில் செயல்பட்டு வரும் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஏஐடியுசி நூற்பாலை தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார்.

தமிழகத்தில் உள்ள 7 ஆலைகள் உட்பட நாடு முழுவதும் 23 என்டிசி நூற்பாலைகள் செயல்பட்டு வந்தன. கொரோனா நோய்தொற்று முதல் அலை பரவிய 2020-ம் ஆண்டு மே 18-ம் தேதி முதல் என்டிசி நூற்பாலைகளில் உற்பத்திகள் நிறுத்தப்பட்டன. மூன்றாண்டுகளாக மீண்டும் உற்பத்தி தொடங்கப்படவில்லை.

கடந்த இரண்டு ஆண்டுகளில், பணி ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு பணப்பலன்கள் வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகளும் மத்திய ஜவுளித்துறை அமைச்சர், செயலர், என்டிசி தலைமை அலுவலக உயரதிகாரிகளை நேரில் சந்தித்து பிரச்சினைகளை குறித்து எடுத்துக்கூறி மனு அளித்தும் இதுவரை உற்பத்தி தொடங்கப்படவில்லை.

எனவே, மத்திய அரசை கண்டித்து கோவைக்கு வரும் அனைத்து மத்திய அமைச்சர்களுக்கும் என்டிசி தொழிலாளர்கள் சார்பில் கருப்புக்கொடி காட்டுவது, ஏப்ரல் 20-ம் தேதி கோவை 5 உட்பட தமிழகத்திலுள்ள 7 என்டிசி நூற்பாலைகளின் முன்பு கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்துவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்த கூட்டத்தில், எச்எம்எஸ் தொழிற்சங்கம் ராஜாமணி, ஏடிபி கோபால், சிஐடியு பத்மநாபன், ஐஎன்டியுசி பாலசுந்தரம், ஏஐடியுசி சிவசாமி, எம்எல்எப் தியாகராஜன், அப்தேக்கார் சங்கம் நீலமேகம் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...