உணவில் சிறுதானியங்களை சேர்த்துக் கொள்ள வேண்டும்..! - சத்குரு அறிவுரை

கோவை ஈஷா மைய நிறுவனர்‌ சத்குரு, தமிழக மக்களுக்கு தமிழ்புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்து செய்தியில், பாரம்பரியமான சிறுதானியங்களை நம்‌ உணவில்‌ சேர்த்துக்கொள்ள வேண்டும்‌ என வலியுறுத்தியுள்ளார்.


கோவை: கோவை ஈஷா மைய நிறுவனர்‌ சத்குரு, தமிழக மக்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

கோவை ஈஷா மைய நிறுவனர்‌ சத்குரு, தமிழக மக்களுக்கு தமிழ்புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அதில், 'உலகத்தில்‌ உள்ள அனைத்து தமிழர்களுக்கும்‌ தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்‌. நம்‌ தமிழ்க்கலாச்சாரத்தில்‌, மண்ணை 'தாய்‌ மண்‌' எனச்‌ சொல்லுகிறோம்‌. ஏனெனில்‌, அந்தக் காலத்திலிருந்தே மண்‌ நம்‌ உயிருக்கு மூலமானது, நம்‌ தாய்‌ போல என்று உணர்ந்து, நாம்‌ பல்லாயிரம்‌ வருடங்களாக விவசாயம்‌ செய்து வருகிறோம்‌.

தமிழ்‌ மக்களுக்கு விவசாயத்தில்‌ மிகவும்‌ ஆழமான அனுபவம்‌ உள்ளது. அப்படி இருப்பினும்‌, கடந்த இருபது, முப்பது வருடங்களில்‌ நம்‌ மண்ணைக்‌ காப்பாற்றாமல்‌ விட்டுவிட்டோம்‌.

நம்‌ மணணைக்காக்க, நாம்‌ அனைவரும்‌ கம்பு, வரகு, சாமை, ராகி உள்ளிட்ட சிறுதானியங்களை நம்‌ உணவில்‌ சேர்த்துக்‌ கொள்ள வேண்டும்‌. ஏனெனில்‌, சிறுதானியங்கள்‌ வளரும்‌ இடத்தின்‌ மண்‌ வளமாகவே இருக்கும்‌. மேலும்‌, தமிழ்‌ என்பது வெறும்‌ மொழி மட்டுமல்ல. இது ஒரு பெருமை, இது ஒரு திறமை.

திறமை என்றால்‌ ஏதோ ஒரு செயல்‌ மட்டும்‌ இல்லை. நாம்‌ வாழும்‌ முறையிலேயே நம்‌ திறமை காட்டப்படவேண்டும்‌. நம்‌ தமிழ்‌ கலாச்சாரத்தில்‌, இலக்கியத்தில்‌, எல்லா இடங்களிலும்‌, சித்தர்‌, சீடர்‌, யோகிகள்‌ என இருந்தனர்‌. உள்நிலையில்‌ எப்படி இருக்கிறோம்‌ என்பது முக்கியம்‌ என்பதால்‌, ஒரு ஊரை உருவாக்கும்‌ முன்னரே அங்கு கோயிலை உருவாக்கினோம்‌.

பொருளாதாரம்‌, குடும்ப வாழ்க்கை என எல்லாவற்றையும்விட முக்கியமானது நமது ஆன்மீகம்‌. நாமே ஒரு கோயிலாக வாழவேண்டும்‌ என்பதாலேயே, தமிழ்நாட்டின்‌ குறியீடாக ஒரு கோயிலை வைத்துள்ளோம்‌. இதுதான்‌ தமிழ்‌ கலாச்சாரம்‌. இந்த தமிழ்‌ புத்தாண்டில்‌ உங்கள்‌ அனைவருக்கும்‌ எனது ஆசியும்‌, வாழ்த்துக்களும்‌' எனக்‌ கூறியுள்ளார்.

Newsletter

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...