திருப்பூர் அருகே சொத்துக்காக இளைஞரை கட்டிப்போட்டு தாக்கிய உறவினர்கள் - வீடியோ வெளியீடு

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே சொத்து பிரச்சனைக்காக ஆனந்த் என்பவரை, சக உறவினர்களே சாலையில் கயிற்றால் கட்டிப்போட்டு தாக்கினர். இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



கோவை: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே படியூர் பகுதியில் ஏசையன் என்பவருக்கும் ஆனந்த் என்பவரின் தாய்க்கும் சொந்தமான வீடு உள்ளது.

ஆனந்த் என்பவர் ஏசையனின் சொந்த அக்கா மகன்.இந்நிலையில், பாகப்பிரிவினை ஏற்படுத்தப்பட்ட நிலையில், ஆனந்த்தின் தாய்க்கு வரவேண்டிய பணத்தை, ஏசையன் தராமல் காலம் கடத்தி வந்துள்ளார்.



இதுகுறித்து, கடந்த 14ஆம் தேதி ஆனந்த், ஏசையன் வீட்டுக்கு சென்று கேட்டபோது, ஏசையன் அப்பகுதி இளைஞர்களை அழைத்து ஊர்விட்டு ஊர்வந்து சொத்தில் பங்கு கேட்பதாக கூறி, ஆனந்த்தை அங்கிருந்த இளைஞர்கள் உதவியுடன் கயிற்றின் மூலம் கட்டி சுமார் 3 மணி நேரம் வைத்து தாக்கியதாகக் கூறப்படுகிறது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கயிறுகளை அவிழ்த்து விட்டதாகவும், காயமடைந்த ஆனந்த் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்றதாகவும் தெரிகிறது.



இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தும் கூட, தன்னை தாக்கியவர்கள் மீது புகார் வழக்கு பதிவு செய்யாமல் தன் மீதும் இந்த பிரச்சனையில் சம்பந்தமில்லாத தனது தம்பி ஜெயக்குமார் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்ததாக ஆனந்த்குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த 14ஆம் தேதி சம்பவம் நடைபெற்ற நிலையில், ஆனந்த் தாக்கப்பட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...