பல்லடத்தில் இருசக்கர வாகன விழிப்புணர்வுப் பேரணி - தலைக்கவசம் அணியும்படி வலியுறுத்தல்

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கட்டாய தலைக்கவசம் அணிவதை வலியுறுத்தி நடைபெற்ற இரு சக்கர வாகன விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. இதில், நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகர் பகுதியில் நாளுக்குநாள் வாகன ஓட்டிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதனால் வாகன விபத்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.



இந்நிலையில், பல்லடம் போக்குவரத்து காவல்துறை மற்றும் மோட்டார் வாகன பழுது பார்ப்போர் நல சங்கம் ஆகியோர் இணைந்து தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாகன விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.



பல்லடம் நால்ரோட்டில் இருந்து செட்டிபாளையம் பிரிவு வரை சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியை பல்லடம் போக்குவரத்து காவல் துணை ஆய்வாளர் அண்ணாதுரை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.



இதில், தலைக்கவசம் அணிந்தபடி நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று இருசக்கர வாகனத்தில் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு பேரணியாக சென்றனர். அப்போது, தலைக்கவசம் அணிவது அவசியம் எனவும், தலைக்கவசம் அணிவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும்ம் பொது மக்களிடையே அவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...