உடுமலை அருகே தென்னை மரங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள் - பொதுமக்கள் அச்சம்!

உடுமலை அடுத்த திருமூர்த்திமலை சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமங்களில் முகாமிட்டுள்ள காட்டு யானை கூட்டம், திருமூர்த்தி நகர் பி.ஏ.பி., அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள, விவசாயி ஆறுமுகம் தோப்பிற்குள் கம்பி வேலியை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த 30க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை உடைத்து சேதப்படுத்தி உள்ளன.


திருப்பூர்: உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலை சுற்றுவட்டார கிராமங்களில் புகுந்த காட்டு யானை கூட்டம், தென்னை மரங்கள் மற்றும் கம்பி வேலிகளை சேதப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருவதால், யானை கூட்டம் நீர் தேடி திருமூர்த்தி அணைப் பகுதியில் முகாமிட்டு உள்ளன.



இந்த நிலையில், அதிகாலை 2 மணிக்கு, திருமூர்த்தி நகர் பி.ஏ.பி., அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள, விவசாயி ஆறுமுகத்திற்கு சொந்தமான தென்னந்தோப்புக்குள் மூன்று குட்டிகளுடன் கூடிய, 11 யானைகள் கொண்ட கூட்டம், கம்பி வேலியை உடைத்து புகுந்துள்ளன.



அப்போது, அங்கிருந்த, 30க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை முறித்து, குருத்துக்களை சாப்பிட்டுள்ளன. இதுகுறித்து தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு சென்று வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தினர்.

இதேபோல் கடந்த வாரம், ஐந்து தோப்புகளுக்குள் புகுந்த காட்டு யானைகள் தென்னை மரங்களை சேதப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே திருமூர்த்தி நகர் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், இலங்கை அகதிகள் முகாம், பி.ஏ.பி., அலுவலகங்கள், குடியிருப்புகள், தென்னை வளர்ச்சி வாரியம், குடிநீர் திட்ட சுத்திகரிப்பு நிலைய சுற்றுவட்டார பகுதிகளில் யானைக்கூட்டம் அதிகரித்துள்ளதால், அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும், வன எல்லை பகுதிகளுக்கும் யானைகள் வருவதை தடுக்க, அவற்றுக்கு உணவு, குடிநீர் வசதி செய்யவும், கண்காணிக்கவும், 200 மீட்டர் நீளத்திற்கு அகழி, சோலார் வேலி அமைக்கவும், வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...