உடுமலை அருகே தென்னை மரங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள் - பொதுமக்கள் அச்சம்!

உடுமலை அடுத்த திருமூர்த்திமலை சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமங்களில் முகாமிட்டுள்ள காட்டு யானை கூட்டம், திருமூர்த்தி நகர் பி.ஏ.பி., அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள, விவசாயி ஆறுமுகம் தோப்பிற்குள் கம்பி வேலியை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த 30க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை உடைத்து சேதப்படுத்தி உள்ளன.


திருப்பூர்: உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலை சுற்றுவட்டார கிராமங்களில் புகுந்த காட்டு யானை கூட்டம், தென்னை மரங்கள் மற்றும் கம்பி வேலிகளை சேதப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருவதால், யானை கூட்டம் நீர் தேடி திருமூர்த்தி அணைப் பகுதியில் முகாமிட்டு உள்ளன.



இந்த நிலையில், அதிகாலை 2 மணிக்கு, திருமூர்த்தி நகர் பி.ஏ.பி., அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள, விவசாயி ஆறுமுகத்திற்கு சொந்தமான தென்னந்தோப்புக்குள் மூன்று குட்டிகளுடன் கூடிய, 11 யானைகள் கொண்ட கூட்டம், கம்பி வேலியை உடைத்து புகுந்துள்ளன.



அப்போது, அங்கிருந்த, 30க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை முறித்து, குருத்துக்களை சாப்பிட்டுள்ளன. இதுகுறித்து தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு சென்று வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தினர்.

இதேபோல் கடந்த வாரம், ஐந்து தோப்புகளுக்குள் புகுந்த காட்டு யானைகள் தென்னை மரங்களை சேதப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே திருமூர்த்தி நகர் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், இலங்கை அகதிகள் முகாம், பி.ஏ.பி., அலுவலகங்கள், குடியிருப்புகள், தென்னை வளர்ச்சி வாரியம், குடிநீர் திட்ட சுத்திகரிப்பு நிலைய சுற்றுவட்டார பகுதிகளில் யானைக்கூட்டம் அதிகரித்துள்ளதால், அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும், வன எல்லை பகுதிகளுக்கும் யானைகள் வருவதை தடுக்க, அவற்றுக்கு உணவு, குடிநீர் வசதி செய்யவும், கண்காணிக்கவும், 200 மீட்டர் நீளத்திற்கு அகழி, சோலார் வேலி அமைக்கவும், வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

2026 நீட் தேர்வு ரத்து: மே 3ஆம் தேதி நடைபெற்ற NEET தேர்வு செல்லாது! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்கள் மற்றும் தேர்வின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கடந்...

உலக செவிலியர் தினம்: திருப்பூரில் விழிப்புணர்வு பேரணி

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர்கள் உறுதிமொழி ஏற்று விழிப்புணர்வு பேரணிய...

திருப்பத்தூர் TVK எம்.எல்.ஏ. சீனிவாச செதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க Madras High Court தடை

திருப்பத்தூர் தொகுதியில் இரண்டு இடங்களில் ஒரே பெயர் இருப்பதால் DMK முன்னாள் அமைச்சர் K.R. பெரியகருப்பன் தாக்கல் செய்த மன...

வால்பாறையில் பயங்கர விபத்து: கார் மோதி பெண் படுகாயம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. படுகாய...

வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய பதைபதைப்பு சம்பவம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. சிசிடி...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...