கிணத்துக்கடவு அருகே மாமியாரை தாக்கிய மருமகன் - மகளை அடித்ததை தட்டிக் கேட்டதால் ஆத்திரம்!

கோவை கிணத்துக்கடவு அருகே குடும்பத்தகராறில் மாமியார் உட்பட இருவரை ஆயுதத்தால் தாக்கிவிட்டு இளைஞர் தப்பியோடினார். பொள்ளாச்சி பகுதியில் தலைமறைவாக இருந்த கூலித்தொழிலாளியான ஆறுமுகத்தை கிணத்துக்கடவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



கோவை: திண்டுக்கல் மாவட்டம் பழனி கீரனூரை சேர்ந்தவர் நல்லுசாமி இவரது மனைவி காமாட்சி. நல்லுசாமி கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். இவர்களுக்கு ஜோதிமணி (வயது27) என்ற மகள் உள்ளார். மகள் ஜோதிமணியை பழனி சேர்ந்த ஆறுமுகம் (வயது27) என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.

மேலும் காமாட்சி கடந்த சில மாதங்களுக்கு முன் கோவை கிணத்துக்கடவு கொண்டம்பட்டி பகுதியில் உள்ள ஈஸ்வரன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு தங்கி தேங்காய் உரிக்கும் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில், பழனியில் இருந்த ஜோதிமணி மற்றும் அவரது கணவர் ஆறுமுகம் இடையே இரண்டு நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த ஆறுமுகம் ஜோதிமணியை தாக்கியுள்ளார். இதனால் கோபித்துக் கொண்ட ஜோதிமணி கிணத்துக்கடவு பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று ஜோதிமணியை அழைத்துச் செல்ல ஆறுமுகம் கிணத்துக்கடவில் உள்ள மாமியார் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, ஜோதிமணியை தாக்கியது குறித்து அவரது தாய் காமாட்சி, ஆறுமுகத்திடம் கேட்டுள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஆறுமுகம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காமாட்சியை குத்தி உள்ளார்.

தடுக்குச் சென்ற வீட்டு உரிமையாளர் ஈஸ்வரனையும், ஆறுமுகம் கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். இதில் படுகாயமடைந்த இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த கிணத்துக்கடவு போலீசார் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் பொள்ளாச்சி அருகே பதுங்கி இருந்த ஆறுமுகத்தை கிணத்துக்கடவு போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரை காவல் நிலையத்தில் வைத்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்ப தகராறு காரணமாக மாமியார் உட்பட இருவரை மருமகனே கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...

சிங்காநல்லூர் தொகுதியில் MGR வேடத்தில் வாக்கு சேகரித்த AIADMK வேட்பாளர் கே ஆர். ஜெயராம்

சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram MGR வேடமனிந்து நந்தா நகர், திருக்குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி...

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...