கோவையில் தந்தையை அடித்து கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை!

கோவையில் குடும்ப தகராறில்  தந்தையை அடித்துக் கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை குண்டு வெடிப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.


கோவை: கோவையில் தந்தையை கொன்ற வாலிபருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது.

கோவை சரவணம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார். இவரது மகன் குமரவேல் வேலைக்குச் செல்லாமல் குடித்துவிட்டு வீட்டில் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.

இதனிடையே கடந்த 2018ஆம் ஆண்டு ஏற்பட்ட தகராறில் கிருஷ்ணன் குமரவேலை கத்தியால் குத்தியதாக கைது செய்யப்பட்டு பிணையில் வெளியே வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு கிருஷ்ணனுக்கு குமரவேல் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் குமரவேல் அவரது தந்தை கிருஷ்ணனை கட்டையால் அடித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து போலீசார் குமரவேலை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு கோவை குண்டு வெடிப்பு சிறப்பு நீதிமன்றத்தில்நடைபெற்று வந்தது.

இந்த வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில் குமரவேலுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சசிரேகா உத்தரவிட்டுள்ளார்.

Newsletter

கோவையில் பள்ளி, பேருந்து நிலையங்கள் அருகேயுள்ள டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு.

தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் செயல்பட்டு வரும் 717...

சென்னை - கோவை இடையே மே 31 வரை கோடைகால சிறப்பு ரயில் சேவை; தொழில்துறை வரவேற்பு

கோடை விடுமுறை காலத்தில் சென்னை - கோவை இடையே மே 13 முதல் 31 வரை சிறப்பு ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்...

2026 நீட் தேர்வு ரத்து: மே 3ஆம் தேதி நடைபெற்ற NEET தேர்வு செல்லாது! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்கள் மற்றும் தேர்வின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கடந்...

உலக செவிலியர் தினம்: திருப்பூரில் விழிப்புணர்வு பேரணி

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர்கள் உறுதிமொழி ஏற்று விழிப்புணர்வு பேரணிய...

திருப்பத்தூர் TVK எம்.எல்.ஏ. சீனிவாச செதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க Madras High Court தடை

திருப்பத்தூர் தொகுதியில் இரண்டு இடங்களில் ஒரே பெயர் இருப்பதால் DMK முன்னாள் அமைச்சர் K.R. பெரியகருப்பன் தாக்கல் செய்த மன...

வால்பாறையில் பயங்கர விபத்து: கார் மோதி பெண் படுகாயம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. படுகாய...