தனுஷின் கேப்டன் மில்லர் படப்பிடிப்புக்கு தடையா..? - அமைச்சர் மதிவேந்தன் பதில்

தென்காசி முண்டத்துறை புலிகள் சரணாலயத்தில் தனுஷின் கேப்டன் மில்லர் படத்தின் படப்படிப்பு நடந்து வருகிறது. இங்கு படப்பிடிப்பு உரிய அனுமதி பெறாமலும், வனப்பகுதியில் வெடிகுண்டு பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வனத்துறை அமைச்சர் மதிவேந்தனிடம் கேட்டபோது, விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.



கோவை: கேப்டன் மில்லர் படப்பிடிப்பு தளத்தில் வனத்துறை விதிகள் மீறப்பட்டிருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார்.

கோவை வந்த அமைச்சர் மதிவேந்தனிடம், தென்காசி முண்டத்துறை புலிகள் சரணாலயத்தில் அரசு அனுமதி இல்லாமல் தனுஷின் கேப்டன் மில்லர் படப்பிடிப்பு தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வியை எழுப்பினர். அதற்கு அமைச்சர் மதிவேந்தன் கூறியதாவது:

எப்போதும் வனப்பகுதியில் சூட்டிங் எடுக்கும்போது அனுமதி கேட்பார்கள். அந்த அனுமதி மாவட்ட வனத்துறை அலுவலர், நேரடியாக சென்று அதை ஆய்வு செய்துதான் அனுமதி கொடுப்போம்.

எந்த நேரத்தில் எந்த தேதியில் எடுக்கிறோம், காலையிலிருந்து மாலை வரை எந்த நேரத்தில் எந்த இடத்தில் எடுக்கிறோம் என்பதை கேட்டு அதை ஆய்வு செய்துதான் அனுமதி வழங்குவோம். சூட்டிங் நடத்த அனுமதி இல்லை என்ற குற்றச்சாட்டை விசாரிக்க வேண்டும்.



வெடிகுண்டு வெடிக்கப்பட்டு காட்சிகள் எடுப்பதற்கான குற்றச்சாட்டை விசாரிக்க வேண்டும். விசாரித்துவிட்டு உரிய நடவடிக்கை எடுப்பேன். அனுமதி இல்லாமல் வனப்பகுதிக்குள் எடுப்பதற்கு வனத்துறையோ, அரசோ உறுதுணையாக இருக்காது.

அவ்வாறு அனுமதி பெற்றிருந்தாலும் கூட அந்த அனுமதிக்கு உட்பட்ட விஷயங்களை மீறியிருக்கிறார்களா? என்பது தொடர்பாக விசாரிக்க வேண்டும்.

இவ்வாறு, அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார்.

Newsletter

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...