பல்லடம் அருகே 16 ஆண்டுக்குப்பின் நடந்த கோயில் கும்பாபிஷேகம் - ஆயிரக்கணக்கான மக்கள் சாமி தரிசனம்!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சித்தம்பலம்புதூர் கிராமத்தில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு மாகாளியம்மன் மற்றும் விநாயகர் கோயில்களுக்கான கும்பாபிஷேகம் சிறப்பாக நடத்தப்பட்டது. இதில், சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சித்தம்பலம் புதூர் கிராமத்தில் அருள்மிகு மாகாளியம்மன் மற்றும் விநாயகர் திருக்கோவில் அமைந்துள்ளது. இரண்டு கோவில்களும் புரனமைப்பு செய்யப்பட்டு 16 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேக பெருவிழா நடைபெற்றது.

கடந்த 24 ஆம் தேதி தீர்த்த கலசம் மற்றும் முளைப்பாரி எடுத்து விநாயகர் வழிபாட்டுடன் கும்பாபிஷேகப் பெருவிழா தொடங்கியது.



அம்பிகைக்கு முதற்கால யாக பூஜைகள் செய்யப்பட்டு, யாகசாலையில் இருந்து கோபுர கலசத்திற்கு தீர்த்த குடங்கள் எடுத்து வரப்பட்டு, சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க, கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.



மாகாளியம்மன் மற்றும் விநாயகர் திருக்கோவில் கோபுர கலசங்களுக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்ட பின், மூலவர் சிலைகளுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...