உடுமலை அருகே கழிவுகளால் சுகாதார சீர்கேடு - பொதுமக்கள் கோரிக்கை!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குரல்குட்டை ஊராட்சியில் கழிவுகள் கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள குரல்குட்டை ஊராட்சிக்கு உட்பட்ட கிழக்கு சுடுகாடு மற்றும் நீர்வழிபள்ளம் குப்பைக்கிடங்காக மாறி துர்நாற்றமும் நோய்பரப்பும் இடமாகவும் மாறியுள்ளது.



கிழக்குபள்ளத்தில் தனியார் மில்லின் கழிவுநீர், குப்பைகள், கோழி இறைச்சிக் கழிவுகள் கொட்டப்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட தனியார் மில்லின் மீதும் கோழிக்கழிவுகள் கொண்டு வந்து கொட்டுவோர் மீதும் சுடுகாட்டில் கட்டிடக் கழிவுகள் கொட்டுவோர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலமுறை மனு கொடுத்தும் போராட்டம் நடத்தியும் இதேநிலை தொடர்வதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். பள்ளங்களில் பன்றிக் குடிசைகள் உட்பட பல்வேறு ஆக்கிரமிப்புகளும் அப்பகுதியில் இருந்து வருகிறது.



உடுமலை ஊராட்சி ஒன்றியமும் குரல்குட்டை ஊராட்சியும் இப்பிரச்சனைகள் தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அடுத்தக்கட்ட போராட்டம் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...