உடுமலை அருகே மண்ணெண்ணெய் ஸ்டவ் தீப்பிடித்ததில் பெண் பலியான சோகம்!

உடுமலை அடுத்த போடிபட்டி பகுதியில் சமைப்பதற்காக மண்ணெண்ணெய் ஸ்டவ்வை பற்ற வைத்த போது ஏற்பட்ட தீவிபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த வெஜினா (37) என்ற பெண், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.


திருப்பூர்: உடுமலை அருகே மண்ணெண்ணெய் ஸ்டவ் பற்ற வைத்த போது ஏற்பட்ட தீவிபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பெண், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த போடிபட்டியைச் சேர்ந்தவர்கள் சதீஷ் -வெஜினா தம்பதி. இவர்களுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், கடந்த மார்ச் 24 ஆம் தேதி வெஜினா சமைப்பதற்காக மண்ணெண்ணெய் ஸ்டவ்வை பற்ற வைத்துள்ளார்.

அப்போது, எதிர்பாராத விதமாக அந்த ஸ்டவ் தடுமாறி கீழே விழுந்து தீப்பிடித்துள்ளது. இந்நிலையில் தீ வெஜினா மீது பற்றிய நிலையில், அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதனிடையே தீக்காயங்களுடன் கோயமுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வெஜினா, நேற்றிரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது தொடர்பாக உடுமலைப்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...