திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்த பெண் - தாராபுரம் அருகே போலீசாரால் கைது!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே திருட்டு வழக்கில் மதன், லோகேஸ்வரன் என இருவரை கைது செய்த நிலையில், தலைமறைவாக இருந்த சுமதி என்கிற பெண்ணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து மூன்றே கால் பவுன் தங்க நகையும் பறிமுதல் செய்தனர்.


திருப்பூர்: தாராபுரத்தை அடுத்த காங்கயம் பாளையம் தெக்கலூர் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் என்கிற அலையாசி மதன் (வயது 35).

இவருடைய மனைவி சுமதி (வயது31). அதே பகுதியில் வசிக்கும் நண்பர் லோகேஸ்வரன் (வயது35).

இவர்கள் 3 பேரும் கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் தாராபுரம் பொள்ளாச்சி சாலையில் உள்ள வழக்கறிஞர் வீட்டிலும், நஞ்சம்பாளையம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலில் சாமி கழுத்தில் இருந்த மாங்கல்யத்தையும் திருடிச் சென்றனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இதையடுத்து, இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக தாராபுரத்தை அடுத்த காங்கயம் பாளையம் தெக்கலூர் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் என்கிற அலையாசி மதன் (வயது 35) மற்றும் இவருடைய நண்பர் லோகேஸ்வரன் (வயது35) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய செல்வகுமார் மனைவி சுமதியை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில், சுமதியை கண்டுபிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து சப்-இன்ஸ்பெகடர் கருப்பு சாமி விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சுமதி கழுத்தில் நகை அணிந்து இருந்தார். அது திருட்டு நகைதான் என தெரியவந்தது.

இதையடுத்து, சுமதியை கைது செய்து, அவர் அணிந்திருந்த 3¼ பவுன் தங்க நகையை பறிமுதல் செய்தனர். கைதான சுமதி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தபட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Newsletter

நொய்டா தொழிலாளர்களுக்கு ஆதரவாக கோவையில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் போராடும் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து, தொழிலாளர் விரோத கொள்கைகளை கண்டித்து கோவையி...

Prioritise Safety Measures: Salem ADRM Urges During Inspection at Tiruppur Railway Station

Salem Additional Divisional Railway Manager (ADRM) R. Saravanan inspected the ongoing Amrit Bharat Scheme works and main...

பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் - திருப்பூரில் சேலம் கூடுதல் ரயில்வே கோட்ட மேலாளர் ஆய்வு..!

திருப்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் அம்ரித் பாரத் திட்டப் பணிகள் மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்த சே...

சனாதன சர்ச்சை: உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட மூவர் மீது நடவடிக்கை கோரி கோவையில் இந்து மக்கள் கட்சி புகார்

மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசியதாகக் கூறி, உதயநிதி ஸ்டாலின், தவெக எம்.எல்.ஏ முஸ்தபா மற்றும் காங்கிரஸ் நிர்வாகி...

707 Kg of Banned Gutka Products Seized in Palladam; Two Arrested

Palladam police seized approximately 707 kilograms of banned gutka products allegedly transported from Karnataka into Ta...

பல்லடத்தில் 707 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல்; இருவர் கைது

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 707 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர...