தாராபுரம் அருகே விபத்தில் காயமடைந்தவருக்கு முதல் உதவி செய்த திமுக மாவட்டச் செயலாளர்

தாராபுரம் அருகே உள்ள மூலனூர் முதல் வெள்ளக்கோவில் செல்லும் சாலையில் புதுப்பை உள்ளது. இந்த இடத்தில் லாரியும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், காயமடைந்த முதியவருக்கு திமுக தெற்கு  மாவட்டச் செயலாளர் பத்மநாபன் முதலுதவி செய்தார்.


திருப்பூர்: புதுப்பை அருகே சாலையில் அடிபட்ட நபருக்கு திமுக தெற்கு மாவட்ட செயலாளர் முதல் உதவி செய்தார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மூலனூர் முதல் வெள்ளக்கோவில் செல்லும் சாலையில் புதுப்பை உள்ளது. இந்த இடத்தில் அமராவதி ஆற்று பாலத்தின் அருகே லாரியும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.



இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற முதியவர் படுகாயம் அடைந்தார். அப்போது அந்த வழியாக சென்ற திமுக திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளரும், மாநகராட்சி நான்காவது மண்டல தலைவருமான பத்மநாபன் சாலை விபத்தில் அடிபட்ட முதியவரை காப்பாற்றி ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்து முதலுதவி சிகிச்சைக்காக வெள்ளக்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...