கோவை அருகே டாஸ்மாக் ஊழியரிடம் ரூ.7.50 லட்சம் கொள்ளை - போலீசார் விசாரணை!

கோவை ஆலாந்துறையை சேர்ந்த சண்முகசுந்தரம், பூளுவம்பட்டி டாஸ்மாக் கடையில் பணிபுரிந்து வருகிறார். பணியை முடித்து விட்டு வந்த போது, கத்தியை காட்டி ரூ.7.50 லட்சம் பணம் பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: பூளுவம்பட்டி டாஸ்மாக் கடை ஊழியரிடம் கத்தியை காட்டி பணம் பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை ஆலாந்துறையை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவர் பூளுவம்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையில் பணியாற்றி வருகிறார். இன்று விடுமுறை என்பதால் நேற்று டாஸ்மாக் கடையில் வசூலான பணம் ரூ.7.38 லட்சம் மற்றும் பதிவேட்டை எடுத்துக் கொண்டு, தனது இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

அப்போது ஆலாந்துறை அருகே வந்தபோது, அவரை வழி மறித்த 3 இளைஞர்கள் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.7.38 லட்சம் பணம், செல்போனை கொள்ளைடித்து சென்றனர். இதையடுத்து அவர் ஆலாந்துறை போலீசில் புகார் அளித்தார்.

புகார் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் டாஸ்மாக் ஊழியரிடம் கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடிவருகின்றனர். மேலும் ஊழியருக்கும் இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர் இருக்குமோ? என்ற கோணத்திலும் விசாரணை செய்து வருகின்றனர்.

Newsletter

கோவை சிறைக்குள் தின்பண்டத்தில் மறைத்து கஞ்சா கடத்த முயற்சி : 4 பேர் மீது வழக்குப்பதிவு..!

கோவை மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு தின்பண்டங்களுக்குள் மறைத்து கஞ்சா கொடுக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளத...

கற்பகம் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு அவசரகால பயிற்சி

கோவையில் உள்ள கற்பகம் மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கான சந்திப்பையும் Basic Life Support மற்றும் அதிர்ச்சி சிகிச்...

கோவையில் ரயில்கள் மீது கல்வீச்சு சம்பவங்கள்: ஆர்.பி.எப் கண்காணிக்க நடவடிக்கை.

கோவையில் ரயில்கள் மீது தொடர்ந்து நடைபெற்று வரும் கல்வீச்சு சம்பவங்களை தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்புப் படையினர் (RPF) தண்...

கோவையில் 6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை : வேன் டிரைவர் போக்ஸோவில் கைது..!

கோவையில் 6 வயது சிறுமிக்கு பள்ளி வேன் டிரைவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் வே...

மேட்டுப்பாளையம் - நெல்லித்துறை சாலையில் தாறுமாறாக நிறுத்தப்படும் கனரக வாகனங்கள் : பக்தர்கள், வாகன ஓட்டிகள் அவதி..!

மேட்டுப்பாளையம் - நெல்லித்துறை சாலையில் உருளைக்கிழங்கு மற்றும் பூண்டு மண்டிகளுக்கு வரும் கனரக லாரிகள் தாறுமாறாக நிறுத்தப...

காரமடை அருகே கிணற்றில் தவறி விழுந்த காட்டுப்பன்றிகள் - பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறை..!

காரமடை அருகே 60 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த தாய் மற்றும் குட்டி காட்டுப்பன்றிகளை, தீயணைப்புத்துறையினர் மற்றும் வன...